அவதூறு வழக்கில் வைகோ நீதிமன்றத்தில் ஆஜர்

Subscribe to Oneindia Tamil

சென்னை:தமிழக அமைச்சர்களும், திமுக மாவட்டச் செயலர்களும் லட்சக்கணக்கில் ரூபாய்நோட்டுக்களை வைத்துக் கொண்டு மதிமுகவில் ஆள் பிடிக்கும் வேலையாகஅலைகின்றனர் என வைகோ கூறியுள்ளார்.

சென்னை அமைந்தகரை புல்லா ரெட்டி அவென்யூவில் நடந்த பொதுக்குழு விளக்கபொதுக் கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசுகையில்,

தென் மாவட்டத்தில் கோடிக்கணக்கான மக்களின் உயிர் ஆதாரமான முல்லைபெரியாறு அணை பிரச்னையில் நடை பயணம் மேற்கொண்டேன். அப்போது, மதிமுகநடத்த இருந்த பொதுக்குழுவிற்கு தடை விதிக்க இரவோடு இரவாக உயர்நீதிமன்றத்துக்கு சென்றுள்ளனர்.

நான் நீதித் துறையையும், நீதிபதிகளையும் மதிக்கிறேன். தடை விதிக்க சென்றவர்களில்திமுக வக்கீல்களும் இருந்தனர்.

ஒரு முதல்வர், அரசியல் கட்சியின் தலைவர், ரூ. 30 கோடி இருந்தால்வைகோவையே விலைக்கு வாங்கி விடுவேன் என்று பேசுகிறார். என்ன அதிகாரம்?என்ன ஆணவம்?.

தமிழக அமைச்சர்களும், திமுக மாவட்டச் செயலர்களும் லட்சக்கணக்கில் ரூபாய்நோட்டுக்களை வைத்துக் கொண்டு ஆள் பிடிக்கும் வேலையில் அலைகின்றனர்.

மதிமுக என்னும் கப்பலில் ஓட்டை விழுந்து விட்டது என்று கருணாநிதி, கணேசனைதூண்டி விட்டு நச்சு பிரசாரம் செய்து வருகிறார். அப்படியே ஓட்டை விழுந்தாலும்அனைவரையும் கரையேற்றி விட்டு சந்தோஷமாக ஓட்டை விழுந்த கப்பலோடு இந்தமாலுமி செல்லத் தயார்.

மதிமுக எழுச்சி பெற்ற இயக்கம். யாராலும் எந்த சக்தியாலும் அழிக்க முடியாது. இதுதியாகத்தில் உருவான கட்சி. அவர்கள் இரண்டு பேரையும் நீக்கியதிலும் நன்மை தான்கிடைத்துள்ளது.

திமுக வலையில் விழுந்தவர்கள் அவர்களிடம் பலியாகி விட்டனர், பாவம். என்றாவதுஒரு நாள் அவர்கள் இருவரும் பாவமன்னிப்பு கேட்டு திரும்பி வருவார்கள் என்பதுமட்டும் நிச்சயம் என்றார் வைகோ.

வைகோ கோர்ட்டில் ஆஜர்

இதற்கிடையில் திமுக தொடர்ந்த அவதூறு வழக்கில் எழும்பூர் தலைமை பெருநகர நீதிமன்றத்தில் வைகோஆஜரானார்.

மதிமுகவை உடைக்க முதல்வர் கருணாநிதியும், திமுகவும் முயற்சிகள் செய்து வருவதாகவும், சதித் திட்டம்தீட்டியுள்ளதாகவும் வைகே குற்றம் சாட்டி பேட்டி அளித்திருந்தார். இதையடுத்து முதல்வரை அவதூறாகப்பேசியதாக கூறிவைகோ மீதும், பேட்டியை பிரசுரித்த இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் ஆசிரியர் மற்றும் பதிப்பாளர் மீதும்திமுகபொருளாளர் ஆற்காடு வீராசாமி சென்னை எழும்பூர் தலைமை பெருநகர நீதிமன்றத்தில் அவதூறு வழக்கதொடர்ந்தார்.

இந்த வழக்கில் இன்று நேரில் ஆஜாரிக விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதி பூதநாதன் உத்தரவிட்டிருந்தார்.அதன்படிஇன்று வைகோ நீதிமன்றத்தில் ஆஜரானார். அவருடன் பெரும் திரளான மதிமுகவினரும் கோர்ட்டுக்கு வந்தனர்.

அப்போது ஆற்காடு வீராசாமி கோர்ட்டில் ஆஜராகவில்லை. அவர் ஏன் வரவில்லை என்று வீராசாமியின்வழக்கறிஞரிடம் நீதிபதி வினவினார். அதன் பின்னர் புகார் மனுவின் நகல் வைகோவுக்கு அளிக்கப்பட்டது.இதையடுத்துவிசாரணையை 22ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி அன்று மீண்டும் வைகோ உள்ளிட்டோர் நேரில் ஆஜராகவேண்டும் எனஉத்தரவிட்டார்.

பின்னர் வெளியே வந்த வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில், கருணாநிதியின் சதித் திட்டத்தையும்,மதிமுகவைஅழிக்க அவர் மேற்கொள்ளும் சூழ்ச்சிகளை அம்பலப்படுத்தவும் இது எனக்கு நல்ல வாய்ப்பு. இந்த வழக்கைநான்சட்டப்பூர்வமாக சந்திப்பேன்.

மதிமுகவுக்குள் குழப்பத்தை விளைவித்து அதை உடைக்க முயன்ற கருணாநிதியின் முயற்சிகள் தோற்றுப்போயுள்ளன.கருணாநிதியின் முயற்சிகள் மதிமுக தொண்டர்களை மேலும் உறுதியாக்க உதவியுள்ளது.

எல்.கணேசனும், செஞ்சி ராமச்சந்திரனும் கட்சிப் பொறுப்புகளிலிருந்துதான் நீக்கப்பட்டுள்ளனர். உறுப்பினர்பொறுப்பிலிருந்து அவர்கள் நீக்கப்படவில்லை. எனவே நடந்து கொண்டதற்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டால்அவர்கள்இருவரும் தொடர்ந்து மதிமுகவில் செயல்படலாம்.

எனக்கு அவர்கள் மீது எந்த கோபமும் இல்லை. கருணாநிதியின் திட்டங்களுக்கு அவர்கள் இரையாகியுள்ளனர்.எனவேஅவர்களை நான் பெரிதாக கருதவில்லை என்றார் வைகோ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+