திருச்சி-மங்களூர் ரயில் ரத்து: மக்கள் கொந்தளிப்பு
திருச்சி:திருச்சி, மங்களூர் இடையிலான ரயில் ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து பல்வேறு சேவை நிறுவனங்களின்கூட்டமைப்பு சார்பில் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதுகுறித்து இந்த கூட்டமைப்பின் தலைவர் சேகரன் கூறுகையில், திருச்சி, மங்களூர் இடையிலான ரயில்நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் பொதுமக்கள், வேலைக்குச் செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு இந்த ரயிலை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.திருச்சியை தொடர்ந்து ரயில்வே துறை புறக்கணித்து வருகிறது.
சென்னை-திருச்சி இடையிலான மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயிலை கும்பகோணம் வரை நீட்டித்தனர். பின்னர்மயிலாடுதுரை வரை நீட்டித்தனர். இதன் மூலம் சென்னையிலிருந்து திருச்சிக்கென தனி ரயில் இல்லாத நிலைஏற்பட்டுள்ளது.
இப்போது திருச்சி, மங்களூர் இடையிலான ரயிலையும் ரத்து செய்து விட்டனர். இதன் மூலம் திருச்சி மீது ரயில்வேஅதிகாரிகள் பாரபட்சம் காட்டுவது தெளிவாகியுள்ளது.
திருச்சி, கோட்ட தலைமையிடமாக இருந்தும், திருச்சியிலிருந்து ஒரு ரயில் கூட எங்கும் இயக்கப்படாத அவலநிலை நிலவுகிறது. இதை எதிர்த்தும், ரயில்வே அதிகாரிகளைக் கண்டித்தும் தொடர்ந்து போராட்டம் நடத்தத்திட்டமிட்டுள்ளோம் என்றார் சேகரன்.
போராட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். இதனால் திருச்சி ரயில் நிலையத்தில் போலீஸார்அதிக அளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.
நல்ல லாபத்தில் ஓடிக் கொண்டிருந்த திருச்சி-மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலை சமீபத்தில் நிறுத்திய தெற்கு ரயில்வே,அதற்குப் பதில் சென்னை-கோவை இடையிலான ரயிலை மங்களூர் வரை நீட்டித்தது.
திருச்சி-மங்களூர் ரயிலில் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள்தான் அதிக அளவில் பயணித்து வந்தனர்.மேலும் கரூர், திருச்சி, ஈரோடு மாவட்டங்களில் உள்ள ஜவுளி நிறுவனங்கள், பின்னலாடை நிறுவனங்களில்பணியாற்றுவோர், வியாபாரிகள், மாணவர்களும் இந்த ரயிலையே நம்பியிருந்தனர்.
ஆனால் ரயில்வே துறையின் இந்த அதிரடி நடவடிக்கையால் அனைத்துத் தரப்பினரும் கடுமையாகபாதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications