தமிழகத்தில் இலவச கேஸ் அடுப்பு திட்டம் துவக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:தமிழக அரசின் இலவச கேஸ் அடுப்பு மற்றும் இலவச எரிவாயு இணைப்புத் திட்டத்தை முதல்வர் கருணாநிதி சென்னையில்தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் உள்ள ஏழை குடும்பங்களுக்கு இலவச கேஸ் அடுப்பு மற்றும் எரிவாயு இணைப்புகள் வழங்கப்படும்வழங்கப்படும் என திமுகவில் தேர்தல் அறிக்கையில் உறுதியளிக்கப்பட்டிருந்தது.

அதன்படி இந்தத் திட்டம் இன்று சென்னையில் தொடங்கி வைக்கப்பட்டது. ஆயிரம் விளக்கு தாமஸ் சாலையில் உள்ளதமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வளாகத்தில் காலை நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி இத்திட்டத்தைத்தொடங்கி வைத்து பெண்களுக்கு இலவச கேஸ் அடுப்பை வழங்கினார்.

நிகழ்ச்சியில், மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா, மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், உள்ளாட்சித் துறைஅமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முதல் கட்டமாக இன்று 34,500 பேருக்கு அடுப்புகளும், கேஸ் இணைப்புகளும் வழங்கப்பட்டன. மாவட்டங்களில்அமைச்சர்கள் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தனர்.

இந்த நிதியாண்டில் 3 லட்சம் அடுப்புகளை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. அதில் இந்த மாத இறுதிக்குள் 1.5 லட்சம் பேருக்குஅடுப்புகளும், இணைப்பும் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. மீதமுள்ளவை மார்ச் மாத இறுதிக்குள் வழங்கப்படும். அடுத்த 3வருடங்களில் தமிழகத்தில் எல்லா வீடுகளிலும் கேஸ் அடுப்புகள் இருக்கும் நிலை உருவாக்கப்படும் என அரசு அறித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+