டெபாசிட் கட்டக் கூட வழியில்லாத எல்.ஜி!
தஞ்சாவூர்:1969ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டபோது எனக்கு டெபாசிட் தொகையைக்கட்டக் கூட வழியில்லை என்று தனது பழைய நினைவுகளை மலர்ந்துள்ளார் போட்டிமதிமுக அவைத் தலைவர் எல்.கணேசன்.
சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் கண்ணேத்தங்குடி கீழையூரில் நடந்த பொங்கல்விழாவில் எல்.கணேசன் பேசுகையில்,
அப்போது 1969ம் ஆண்டு தேர்தல் நடந்தபோது என்னால் டெபாசிட் கட்டக் கூடவழியில்லை. அப்போது எனது ஊர் மக்கள்தான் எனக்காக டெபாசிட் கட்டினர்.
உறவில் இரண்டு வகை உண்டு. தாமாக ஏற்படும் உறவு, நாம் தேடி ஏற்படுத்திக்கொண்ட உறவு. அரசியல் நிரந்தர உறவு கிடையாது. ஆனால் ஊர் மக்கள் ஏற்படுத்தியஉறவு நிரந்தரமானது.
நிரந்தரமற்ற அரசியல் உறவுக்காக, நிரந்தரமான ஊர் உறவை மறந்து விடக் கூடாது.இப்போது தமிழக அரசியலில் மாற்றம், திருப்பம் ஏற்பட்டு விட்டது. அன்று முதல்இன்று வரை நான் எடுத்த எந்த முடிவையும் மாற்றிக் கொண்டதே கிடையாது.
அரசியலில் நுழைந்து விட்டாலே சங்கடங்கள்தான். இருக்கும் வரை விசுவாசமாகஇருக்க வேண்டும்.
கீழையூரில் கருணாநிதியை அழைத்து பல விழாக்களை நடத்தியுள்ளேன். மறுபடியும்அவரை அழைத்து வந்து ஒரு விழாவை எடுப்பேன். விரைவில் கருணாநிதியைசந்தித்துப் பேசவுள்ளேன்.
நானும், கருணாநிதியும் பேசிக் கொண்டது போர் யுக்திகள். எனவே அதை வெளியில்சொல்லக் கூடாது என்றார் எல்.ஜி.












Click it and Unblock the Notifications