உள்ளாட்சி இடைத் தேர்தல்-மனு தாக்கல்
சென்னை:தமிழகம் முழுவதும் காலியாக உள்ள உள்ளாட்சி பதவியிடங்களுக்கான இடைத் தேர்தல் வேட்பு மனு தாக்கல்இன்று தொடங்கியது. பிப்ரவரி 8ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
தமிழக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் மாதம் 3 கட்டமாக நடந்தது. அப்போது பல வார்டுகளில் வேட்பாளர்மரணம் உள்ளிட்ட பல காரணங்களினால் தேர்தல் நடக்கவில்லை.
500க்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கு பிப்ரவரி 8ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம்அறிவித்திருந்தது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது.
வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஜனவரி 27 ஆகும். மனுக்கள் பரிசீலனை 29ம் தேதி நடைபெறும். 31ம்தேதி மனுக்களை திரும்பப் பெற கடைசி நாளாகும். பிப்ரவரி 8ம் தேதி வாக்குப் பதிவும், 9ம் தேதி வாக்குஎண்ணிக்கையும் நடைபெறும்.
சென்னை மாநகராட்சியில் 98 கவுன்சிலர்கள் ராஜினாமா செய்ததால் ஏற்பட்ட காலியிடங்கள் உள்பட மொத்தம்100 வார்டுகளுக்கு வேறொரு தேதியில் தேர்தல் நடைபெறும்.












Click it and Unblock the Notifications