ஆண்களுக்கு நோ ப்ராப்ளம்: ஆதீனம்
மதுரை:தை முதல் நாளன்று சிம்ம லக்னத்திலிருந்து சூரியன் மகர ராசிக்கு இடம்பெயர்ந்துள்ளதால் ஆண்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது. இது போல கூறப்படும்தகவல் வதந்தி, மக்கள் பயப்பட வேண்டாம் என மதுரை ஆதீனம் கூறியுள்ளார்.
தை முதல் நாளன்று சூ>யன் சிம்ம லக்னத்திலிருந்து மகர ராசிக்கு இடம் பெயர்ந்தார்.இதனால் வீட்டில் உள்ள ஆண்களுக்கு பிரச்சினை ஏற்படும் என்று வதந்தி கிளம்பியது.
இதையடுத்து தமிழகத்திலும், புதுவையிலும் பெண்கள், வீட்டில் உள்ள ஆண்களின்எண்ணிக்கைக்கு ஏற்ப அகல் விளக்குகளை வீட்டு முன்பு பொருத்தி வைத்துவருகின்றனர்.
இதுகுறித்து மதுரை ஆதீனம் கூறுகையில், மாதங்களில் என்ன நல்ல மாதம், கெட்டமாதம்? எல்லா மாதமும், எல்லாம் வல்ல இறைவன் வகுத்த நல்ல மாதங்கள்தான்.
தை பிறந்த நாள் சரியில்லை என்றும் இதனால் ஆண்களுக்கு ஆபத்து ஏற்படும் என்றுகூறப்படுவதில் உண்மை இல்லை. இது வதந்தியே.
இதை மக்கள் நம்ப வேண்டாம். ஆண்களுக்கு எந்த ஆபத்தும், அச்சுறுத்தலும்கிடையாது. பரிகாரமும் செய்ய வேண்டியதில்லை என்றார் ஆதீனம்.












Click it and Unblock the Notifications