போலி கிரடிட் கார்டு மூலம் 30 லட்சம் மோசடி

Subscribe to Oneindia Tamil

சென்னை:போலி கிரடிட் கார்டுகள் மூலம் ரூ. 30 லட்சம் அளவுக்கு மோசடி செய்த இலங்கைவாலிபரை போலீஸார் கைது செய்தனர்.

இலங்கையைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவர் லண்டனில் வேலை பார்த்துவருகிறார். சுற்றுலா விசாவில் சென்னைக்கு வந்த அவர் ஆழ்வார்திருநகரில் வீடுஎடுத்துத் தங்கினார்.

போரூர் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி அருகே உள்ள ஏடிஎம் மையத்திற்குச் சென்றுகிரடிட் கார்டுகளைப் போட்டு பணம் எடுத்துள்ளார். கை நிறைய கார்டுகளுடன்இருந்த அவர் மீது ஏடிஎம் மைய காவலாளிக்கு சந்தேகம் வந்துள்ளது.

இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார். விரைந்து வந்த போலீஸார்இளங்கோவனைப் பிடித்து விசா>த்தனர். அவரிடமிருந்த 28 கார்டுகளைக்கைப்பற்றினர்.

இவை அனைத்தும் லண்டனில் சிலரின் பெயரில் வாங்கப்பட்ட போலி கிரடிட்கார்டுகள் ஆகும். இந்தக் கார்டுகளை வைத்துக் கொண்டு கடந்த சில நாட்களில் 30லட்சம் ரூபாயை மோசடியாக எடுத்துள்ளார்.

மேலும் 2 சொகுசுக் கார்களையும் இந்தப் பணத்தை வைத்து அவர் வாங்கியுள்ளார்.இளங்கோவனை கைது செய்த போலீஸர் அவ>டமிருந்து சொகுசுக் கார்களையும்பறிமுதல் செய்தனர்.

இதுதவிர லண்டனில் உள்ள தனது கூட்டாளிக்கு ஹவாலா மூலம் பணமும்அனுப்பியுள்ளார் இளங்கோவன். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+