இராக்-யுஎஸ் ஹெலிகாப்டர் விழுந்து 13 பேர் பலி
பாக்தாத்:பாக்தாத் அருகே அமெ>க்க ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் அதிலிருந்த 13 வீரர்களும்பலியாயினர்.
மேலும் நேற்று ஒரே நாளில் 16 அமெரிக்க வீரரர்கள் பலியாகியுள்ளனர். கடந்த நான்கு ஆண்டுகளில் அமெரிக்கராணுவத்தின் பல ஹெலிகாப்டர்கள் விபத்தில் சிக்கியும், சதாம் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டும் வீழ்ந்துள்ளன.
இந்த நிலையில் பாக்தாத்தின் வடகிழக்கில் நடந்த சம்பவத்தில்தான் அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் வீழ்ந்தது.இந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதா அல்லது சதாம் ஆதரவாளர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டதா என்பதுகுறித்து தெரிவிக்கப்படவில்லை.
அதில் இருந்த 13 ராணுவ வீரர்களும் பலியாகி விட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்திற்கு அமெரிக்க செனட் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி இரங்கலும், புஷ்ஷுக்குகண்டனமும் தெரிவித்துள்ளார். அமெரிக்க வீரர்களின் உயிருடன் விளையாடி வருகிறார் புஷ் என்று அவர்காட்டமாக கூறியுள்ளார்.
இதற்கிடையே கர்பலா நகரில் சதாம் ஆதரவாளர்கள் தாக்கியதில் 3 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர்.
பஸ் குண்டுவெடிப்பில் 6 பேர் பலி:
இதற்கிடையே இன்று பாக்தாத்தின் மையப் பகுதியில் உள்ள கர்ராடா என்ற இடத்தில் பேருந்தில்குண்டுவெடித்ததில் அதில் பயணம் செய்த 6 பேர் கொல்லப்பட்டனர். 15 பேர் காயமடைந்தனர்.
குண்டுவெடிப்பில் பஸ் முழுவதும் எரிந்து போனது.












Click it and Unblock the Notifications