ஆளுநர் உரையும், இட்லி மாவும்-ஜெ கிண்டல்
சென்னை:இட்லி மாவை மேலும் மேலும் அரைத்தால் என்னாகும்?. துணியுடன் இட்லி ஒட்டிக்கொள்ளும். அதுபோலத்தான் ஆளுநர் உரையிலும் அரைத்த மாவையேஅரைத்துள்ளனர் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
தமிழக சட்டசபையில் நேற்று ஆளுநர் ஆற்றிய உரை குறித்து ஜெயலலிதாவெளியிட்டுள்ள கருத்து:
அரைத்த மாவையே அரைத்துள்ளனர். இட்லி மாவை மேலும் மேலும் அரைத்தால்என்ன ஆகும் என்பது பெண்களுக்குத் தெரியும். இட்லி வார்க்கவே முடியாது.துணியுடன் ஒட்டிக் கொள்ளும். இதுதான் நடந்திருக்கிறது.
விவசாயிகள் நல வாரியம் அமைக்கப் போகிறார்களாம். இதன் மூலம் 66 லட்சம்பேருக்கு சலுகைகள் அளிக்கப் போவதாக கண் துடைப்பு அறிவிப்பு செய்துள்ளனர்.நாங்கள் கொண்டு வந்த திட்டத்தில் 1 கோடியை 99 லட்சம் விவசாயிகள் பலன்பெற்றனர். ஆனால் அதை சிறுபான்மை கருணாநிதி அரசு 66 லட்சமாக சுருக்கிவிட்டது.
படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தின் மூலம்வேலை கேட்டுப் பதிவு செய்த 50 லட்சம் பேருக்கும் பலன் உண்டாகப் போவதாககூறியுள்ளனர். ஆனால் அவர்களே இத்திட்டத்தின் கீழ் 1 லட்சத்து 50 ஆயிரம்இளைஞர்களுக்குத்தான் உதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். எனவேஇதுவும் ஒரு கண்துடைப்பு, ஏமாற்று வேலை.
கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை ஆட்சிக்கு வந்து 8 மாதங்களாகியும் இன்னும்இந்த அரசு செயல்படுத்தவில்லை.
ரேஷன் கடையில் வழங்கப்படும் 2 ரூபாய்க்கு வழங்கப்படும் அரிசி மோசமானதாகஇருக்கிறது. அதேபோல இலவச கலர் டிவி திட்டமும் ஒரு கண் துடைப்பு.
விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்தோம் என்றார்கள். ஆனால் புதுக் கடன்வழங்கப்படவே இல்லை. காரணம் கூட்டுறவு வங்கிகளிடம் பண்மே இல்லை.அவர்களுக்கு அரசு நிதியும் தரவில்லை.
இந்த ஆளுநர் உரையில் புதிதாக எதுவும் இல்லை. பல பொய்களைச் சொல்லிதொடர்ந்து மக்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள். ஆனால் இனியும் ஏமாற மக்கள்தயாராக இல்லை.
இந்த உரையை குப்பைத் தொட்டியில் தூக்கி எறிவதோடு, சிறுபான்மை திமுகஅரசையும் வரலாற்றின் குப்பைத் தொட்டியில் தூக்கி எறிய மக்கள் தயாராகி விட்டனர்என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications