துபாய்-பாலத்திலிருந்து குதித்து இந்தியர் சாவு
Subscribe to Oneindia Tamil
துபாய்:துபாயில், பாலத்திலிருந்து குதித்து 47 வயது இந்தியர் தற்கொலை செய்து கொண்டார்.
கேரளாவைச் சேர்ந்தவர் செடாசி ஹம்சா. இவர் பஹ்ரைனில் உள்ள நகைக் கடையில் வேலை பார்த்து வந்தார்.நேற்று காலை 10.45 மணிக்கு இவர் துபாயில் உள்ள கிங் பைசல் நெடுஞ்சாலைக்கு காரில் வந்தார்.
காரை பாலத்தில் நிறுத்திவிட்டு, மேம்பாலத்திலிருந்து கீழே குதித்தார். அப்போது கீழே சென்று கொண்டிருந்த கார்கண்ணாடியை துளைத்துக் கொண்டு இவரது உடல் விழுந்தது. இதில் ஹம்சா அங்கேயே இறந்தார். காரில்பயணித்த பஹ்ரைன் தம்பதியினர் காயமடைந்தனர்.
ஹம்சாவுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். குடும்பம் கேரளாவில் வசித்து வருகிறது. கடந்த 3வருடங்களாக இவர் பஹ்ரைன் நகைக் கடையில் வேலை பார்த்து வந்தார்.












Click it and Unblock the Notifications