அனுமன் சிலை அழுததா?
Subscribe to Oneindia Tamil
ராஜ்காட்:பிள்ளையார் சிலை பால் குடித்ததாக கிளம்பிய புரளியைப் போல குஜராத் மாநிலம்ராஜ்காட்டில் உள்ள அனுமன் சிலையின் கண்களிலிருந்து கண்ணீர் வந்ததாக வதந்திபரவியதால் அங்கு பக்தர் கூட்டம் திரண்டது.
ராஜ்காட் நகரில் அனுமன் ஆலயம் ஒன்று உள்ளது. இங்குள்ள அனுமன் சிலையின்கண்களிலிருந்து கண்ணீர் வந்ததாக திடீர் வதந்தி பரவியது. இதயைடுத்து அங்குஏராளமான பேர் கூடி அனுமன் கண்களில் கண்ணீர் வடிகிறதா என்று பார்த்தனர்.
பலர் அங்கேயே அமர்ந்து ராமர் பாடல்கலையும், அனுமன் பாடல்களையும் பாடஆரம்பித்தனர். ஆனால் அனுமன் சிலையின் கண்ணிலிருந்து கண்ணீர் வடியவில்லைஎன்று கோவில் நிர்வாகிகள் விளக்கினர்.
இருந்தும் அதை ஏற்காத பக்தர்கள் நீண்ட நேரம் அமர்ந்து பாடல்களைப் பாடியபின்னர்தான் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.












Click it and Unblock the Notifications