இந்தோனேஷியா: தொடர் பூகம்கம்-சுனாமி பயம்
ஜகார்தா - ஓஸ்லோ:இந்தோனேஷியாவில் நேற்றும் இன்றும் தொடர்ந்து மிக பயங்கர பூகம்பங்கள் ஏற்பட்டன. நேற்று சுலவேசிதீவுகளுக்கு கிழக்கே ஏற்பட்ட இந்த நில நடுக்கம் ரிக்டர் கோளில் 7.3 என்ற அளவுக்கு பதிவானது.
இதனால் சுனாமி ஏற்படும் என அஞ்சி கடலோரப் பகுதி மக்கள் பீதியடைந்து ஓடினர். ஆனால், சுனாமி அலைகள்ஏதும் ஏற்படவில்லை.
இந் நிலையில் இன்று நாட்டின் கிழக்கே பாபுவா மாகாணத்தில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. அவைரிக்டர் கோளில் 5.5, 6.0 என்ற அளவில் பதிவாயின. இரண்டாவது நிலநடுக்கத்தையடுத்து சுனாமி ஏற்படலாம்என்ற அச்சம் உருவானதால் மக்கள் கடல் பகுதிகளைவிட்டு ஓடினர்.
நார்வேயில்..
அதே போல நார்வே நாட்டின் மேற்குப் பகுதியை இன்று நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவு கோளில் இது 4ஆக பதிவானது
நார்வே தலைநகர் ஓஸ்லோவில் இருந்து 400 கி.மீ. தொலைவில் ஏல்சுன்ட் பகுதியில் இந்த நில நடுக்கம்ஏற்பட்டது. இதில் கட்டடங்கள் அதிர்ந்தன. இதனால் மக்கள் பயந்தடித்துக் கொண்டு ஓடினர்.












Click it and Unblock the Notifications