சென்னை-நாகர்கோவில் பயணிகள் கவனத்திற்கு!
சென்னை:முஹர்ரம் மற்றும் குடியரசு தின விடுமுறையையொட்டி சென்னையிலிருந்துநாகர்கோவிலுக்கு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்கவுள்ளது.
குடியரசு தினம் நெருங்குவதையொட்டி ரயில்களில் கூட்டம் நிரம்பி வழியஆரம்பித்துள்ளது. இதையடுத்து சென்னை எழும்பூரிலிருந்து நாகர்கோவிலுக்கு சிறப்புரயில்கள் இயக்கப்படவுள்ளன.
சென்னை எழும்பூரிலிருந்து நாகர்கோவிலுக்கு ஜனவரி 25, 25 ஆகிய நாட்களில் இரவு8.15 மணிக்கு இந்த சிறப்பு ரயில்கள் கிளம்பும். மறு நாள் காலை 10.45 மணிக்குஇவை நாகர்கோவிலை சென்றடையும்.
மறு மார்க்கத்தில், நாகர்கோவிலிலிருந்து ஜனவரி 24, 26, 30 ஆகிய நாட்களில்பிற்பகல் 1.30 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் அதிகாலை 4.30 மணிக்குசென்னையை வந்தடையும்.
ஜனவரி 23, 29 ஆகிய நாட்களில் சென்னை எழும்பூரிலிருந்து இரவு 7 மணிக்குபுறப்படும் சிறப்பு ரயில்கள் அடுத்த நாள் காலை 8.15 மணிக்கு நாகர்கோவிலைஅடையும்.
மறு மார்க்கத்தில், நாகர்கோவிலிருந்து ஜனவரி 28ம் தேதி இரவு 8.30 மணிக்குப்புறப்பட்டு அடுத்த நாள் காலை 9.30 மணிக்கு சென்னையை வந்தடையும்.
ஜனவரி 23, 27 ஆகிய நாட்களில் நாகர்கோவிலிருந்து சென்னைக்கு இயக்கப்படும்சிறப்பு ரயில்கள் இரவு 8.30 மணிக்கு நாகர்கோவிலிலிருந்து புறப்பட்டு அடுத்த நாள்காலை 9.30 மணிக்கு சென்னையை வந்தடையும்.
மறு மார்க்கத்தில் ஜனவரி 24 மற்றும் 28 ஆகிய தேதிகளில் இரவு 8.15 மணிக்குசென்னை எழும்பூரிலிருந்து கிளம்பி, அடுத்த நாள் காலை 10.45 மணிக்கு அவைநாகர்கோவிலை அடையும்.
ஜனவரி 29ம் தேதி இயக்கப்படும் நாகர்கோவில்-எழும்பூர் சிறப்பு ரயில் இரவு 8.30மணிக்குப் புறப்பட்டு அடுத்த நாள் காலை 9.30 மணிக்கு எழும்பூரை வந்தடையும்.
மறு மார்க்கத்தில் 30ம் தேதி இரவு 7 மணிக்கு சென்னை எழும்பூரிலிருந்து புறப்பட்டுஅடுத்த நாள் காலை 8.15 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும்.
25ம் தேதி நாகர்கோவில்-சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் இன்னொருசிறப்பு ரயில் இரவு 8.30 மணிக்குப் புறப்பட்டு அடுத்த நாள் கால 9.15 மணிக்குஎழும்பூரை அடையும்.
மறு மார்க்கத்தில் 26ம் தேதி இரவு 8 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 10.45மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதற்கான முன்பதிவுகள் நேற்று முதல் தொடங்கியுள்ளன.ஷ்ர












Click it and Unblock the Notifications