தொழிலதிபர், டிரைவர் காருடன் எரித்து கொலை
திருச்சி:திருச்சியில் ரியல் எஸ்டேட் அதிபரும் அவரது டிரைவரும் காருடன் எரிந்து கிடந்தனர். அதே நேரத்தில் ரியல்எஸ்டேட் அதிபரின் அண்ணனும் மர்மமான முறையில் தோட்டத்தில் இறந்து கிடந்தார்.
திருச்சி வையம்பட்டி சவேரியார் புரம் ஆஷாத் ரோட்டில் இன்று அதிகாலை ஒரு எரிந்து கொண்டிருந்தது. இதைப்பார்த்த ஒருவர் உடனே போலீசாருக்கு தகவல் தந்தார். போலீசாரும் தீயணைப்புப் படையினரும் விரைந்து வந்துதீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் கார் முழுவதுமாக எரிந்துவிட்டது.
காருக்குள் முழுவதும் எரிந்த நிலையில் 2 ஆண்களின் உடல்கள் கிடந்தன.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது, அந்த கார் திருச்சியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர்துரைராஜுக்கு (47) சொந்தமானது என்று தெரிய வந்தது. மேலும் காரில் இறந்து கிடந்தது துரைராஜும், அவரதுடிரைவர் சக்திவேலும் (26) என்று தெரிந்தது.
திருச்சியை சுற்றி துரைராஜுக்கு ஏகப்பட்ட நிலங்கள், வணிக வளாகங்கள், வீடுகள் உள்ளன. இவர் ரியல்எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டிருந்தார்.
நிலப் பிரச்சனை தொடர்பாக துரைராஜுக்கு பலருடன் தகராறு இருந்து வந்தது. இந் நிலையில் நேற்று காலைஅவர் காணாமல் போனார். இந் நிலையில் மர்மமான முறையில் காருக்குள் டிரைவருடன் இன்று அவர்எரிந்துள்ளார்.
இருவரும் காருடன் எரித்துக் கொல்லப்பட்டதாக கருதப்படுகிறது.
இந் நிலையில் துரைராஜின் அண்ணன் தங்கவேல் உடையார் தனது திருச்சி அருகே தனது தோட்டத்தில் மர்மமானமுறையில் இறந்து கிடந்தார். இவரும் கொலை செய்யப்பட்டதாகவே கருதப்படுகிறது.
அண்ணன்-தம்பிக்கு ஆகாத கும்பல் இந்த கொலைகளை செய்துள்ளதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications