ஏபரல் முதல் மீண்டும் ராமேஸ்வரம்-சென்னை ரயில்

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்: புதிதாக அமைக்கப்பட்டு வரும் பாம்பன் அகல ரயில் பாதையில் ராமேஸ்வரம்-சென்னை ரயில், ஏப்ரல் 1 ம் தேதிமுதல் ஓடும் என ரயில்வேத்துறை அமைச்சர் வேலு கூறியுள்ளார்.

முதல் கட்டமாக மதுரை-மானாமதுரை இடையே அகலப் பாதை பணிகள் முடிக்கப்பட்டன. இரண்டாம் ம்கட்டமாக மானாமதுரை-ராமேஸ்வரம் அகல பாதை பணி முடிவடைந்து ரயில் என்ஜின் சோதனை ஓட்டம்நடத்தப்பட்டது.

இப்போது பாம்பன்-ராமேஸ்வரம் இடையிலான கடல் மீதான தண்டவாளப் பாதை அகலப் பாதையாகமாற்றப்பட்டு வருகிறது. இதை ரயில்வேத்துறை இணையமைச்சர் வேலு பார்வையிட்டார்.

பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,

பாம்பன் பாலத்தை அகல ரயில் பாதையாக்கும் பணி சிறப்பாக நடந்து வருகிறது. இன்னும் 15 நாட்களில் இதுமுழுமை பெறும். இது முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தில் நடந்திருப்பது பெருமையளிக்கிறது, இந்தப்பணியில் ஈடுபட்டுள்ள அரகோணம் ரயில்வே பணிமனையை சேர்ந்த என்ஜீர்களுக்கு ரயில்வே நிர்வாகம் ரூ. 1லட்சம் பரிசு வழங்கும்.

ஏப்ரல் 1 ம் தேதி முதல் பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்படும். இதன் தொடக்கவிழாவிற்கு ஜனாதிபதி அப்துல் கலாம் கலந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறோம் என்றார் வேலு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+