வெளி மாநிலங்களுக்கு இனி ஜில் பயணம்!
சென்னை:ஏசி சொகுசு பஸ்களை தனியாரிடம் இருந்து வாடகைக்கு எடுத்து வெளி மாநிலங்களுக்கு இயக்க அரசுதிட்டமிட்டுள்ளது.
தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் மாலதி இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,தமிழகத்திலிருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லும் தனியார் பேருந்துகளில் ஏ.சி, குஷன் சீட், வீடியோ கோச்என பல சிறப்பம்சங்கள் உள்ளன.
ஆனால் அரசு பேருந்துகளில் இந்த வசதிகள் இல்லாத காரணத்தால், தனியார் பேருந்துகளில் பயணிக்கவேபயணிகள் விரும்புகின்றனர்.
எனவே தனியார் பேருந்துகளுக்குப் போட்டியாக அரசு பேருந்துகளை நவீனப்படுத்த பெரும் நிதி தேவைப்படும்காரணத்தால், தனியார் பேருந்துகளை வாடகை அல்லது ஒத்திக்கு எடுத்து, அரசு போக்குவரத்து கழகத்தின்பெயரில் இயக்க அரசு திட்டமிட்டுள்ளது.
அப்படி முடியாவிட்டால் அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளை இந்த தனியார் பேருந்துகள் மூலம்பயணிக்க வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இதனால் பயணிகள் வசதியாக பயணம் செய்வதோடு, அரசின் நிதிச்சுமையும் பெருமளவு குறையும். இத்திட்டம்விரைவில் செயல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications