முடிவு அவங்க கையில்: கிருஷ்ணசாமி அலுப்பு!
திருச்சி:தமிழக ஆட்சியில் பங்கு பெறுவது குறித்த கட்சியினரின் விருப்பத்தை சொல்லி விட்டோம். இனிமேல்இதுகுறித்து முடிவு செய்ய வேண்டியது சோனியா காந்தியும், கருணாநிதியும்தான் என்று தமிழக காங்கிரஸ்தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
திருச்சி வந்த கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆட்சியில் பங்கு வேண்டும் என்று காங்கிரஸ்தொண்டர்கள் தொடர்ந்து கோரி வருகிறார்கள். ஆனால் அதுகுறித்து நான் முடிவு செய்ய முடியாது.
சோனியா காந்தியும், கருணாநிதியும்தான் இதுகுறித்து முடிவெடுக்க வேண்டும். அவர்களிடம் இப்பிரச்சினையைநாங்கள் ஒப்படைத்து விட்டோம்.
சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாகவே ஆட்சியில் பங்கு தர வேண்டும் என்ற உடன்பாடு எதையும் நாங்கள்மேற்கொள்ளவில்லை. நாங்கள் கேட்கவும் இல்லை, அவர்களும் தருவதாக சொல்லவும் இல்லை.
கட்சியை அடிமட்ட அளவில் வலுவூட்டும் நடவடிக்கையில் நாங்கள் தற்போது தீவிர கவனம் செலுத்திவருகிறோம்.
பாலாற்றின் குறுக்கே அணை கட்டும் முடிவை ஆந்திர அரசு கைவிட வேண்டும். இதை காங்கிரஸ் கட்சி ஏற்காது.எதிர்த்து குரல் கொடுக்கும். இதுதொடர்பாக தமிழக அரசு ஏற்கனவே உரிய நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாகவே உள்ளது. இலங்கைக்கு கண்ணிவெடிகளுக்கான உதிரி பாகங்களைகடத்தியதாக இலங்கைத் தமிழர்கள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்ட விவகாரத்தை மட்டும் வைத்து சட்டம்ஒழுங்கு கெட்டு விட்டதாக எதிர்க்கட்சிகள் கூறுவதை ஏற்க முடியாது என்றார் கிருஷ்ணசாமி.












Click it and Unblock the Notifications