ஆட்சியில் திமுக பங்கு தரும்: இளங்கோவன்
திருநெல்வேலி:திமுக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சியினர் இடம் பெறும் காலமும், நேரமும்நெருங்கி விட்டது. விரைவில் நல்ல செய்தி வரும் என்று மத்திய ஜவுளித்துறைஇணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் வந்த இளங்கோவன் அங்கு செய்தியாளர்களிடம்பேசுகையில், தமிழக அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என்பது காங்கிரஸ்தொண்டர்களின் விருப்பம். அது நிறைவேறப் போகும் நேரம் வந்து விட்டது.
இதுகுறித்து முதல்வர் கருணாநிதியும், அன்னை சோனியா காந்தியும் விரைவில் முடிவுசெய்யவுள்ளனர் என்றார்.
பின்னர் தென்காசியில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், காங்கிரஸ் கட்சியினர்எதிர்பார்க்கும் நல்ல காலமும், பதவியும் விரைவில் வந்து சேரும்.
மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான அமைச்சரைவயில் திமுக இடம் பெற்றுள்ளது.அதேபோல தமிழகத்திலும் காங்கிரஸ் இடம் பெற வேண்டும் என்பதுதான்காங்கிரஸாரின் ஆசை. அதைத்தான் வலியுறுத்தி வருகிறார்கள் என்றார் இளங்கோவன்.












Click it and Unblock the Notifications