திருவனந்தபுரத்தில் மோடி-பலத்த பாதுகாப்பு

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்:கேரள மாநிலம் திருவனந்தபுரம் நகரில் இன்று மாலை தொடங்கும் இந்து மகா மேளாவில் குஜராத் முதல்வர்நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பில் இன்று மாலை திருவனந்தபுரம் புத்தரி கண்ட மைதானத்தில் இந்து மகாமேளா நடைபெறுகிறது. இதில், பங்கேற்பதற்காக சிறப்பு விமானம் மூலம் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிதிருவனந்தபுரம் வருகிறார்.

மகா மேளாவில் மோடி சிறப்புரையாற்றுகிறார், உத்திராடம் திருநாள் மார்த்தாண்டவர்மா மகாராஜா தலைமைதாங்குகிறார். மோடி வருகைக்கு கேரளாவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

மோடி வருகையை கருப்பு தினமாக அனுசரிக்க வேண்டும் என பல்வேறு அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.இதனால் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. மோடிக்கு பலத்த பாதுகாப்பு வழங்க கேரள காவல்துறைக்கு அரசுஉத்தரவிட்டுள்ளது.

மகா மேளாவுக்கும் 3000க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு வழங்குகின்றனர். வெடிகுண்டு நிபுணர்கள்,மோப்ப நாய்களும் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிலரை போலீஸார் கைது செய்துள்ளனர். நேற்று இரவு முதல் நகருக்குள்வரும் அனைத்து வாகனங்களும் தீவிரமாக சோதனையிடப்படுகின்றன.

மத்திய அரசின் இசட் பிரிவு பாதுகாப்பில் உள்ள மோடிக்கு கூடுதலாக 2 கருப்புப் பூணைப் படை வாகனங்கள்பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளன. மகா மேளா நிகழ்ச்சியை முடித்து விட்டு இன்று இரவே மோடிகுஜராத் திரும்புகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+