சத்தியாகிரக நூற்றாண்டு விழா தொடக்கம்
டெல்லி:மகாத்மா காந்தியடிகள் தென் ஆப்பிரிக்காவில் தொடங்கிய சத்தியாகிரகபோராட்டத்தின் நூற்றாண்டு விழா டெல்லியில் இன்று தொடங்கியது.
தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகள் சத்தியாகிரக போராட்டம் துவங்கி நூறுஆண்டுகளாகிறது. இதை முன்னிட்டு சத்தியாகிரக நூற்றாண்டு விழா மாநாடு,டெல்லியில் இன்று தொடங்கியது.
காங்கிரஸ் சார்பில் நடத்தப்படும் இந்த இரண்டு நாள் மாநாட்டில் பல்வேறு உலகநாடுகளின் தலைவர்கள், அதிபர்கள், பிரதமர்கள், அமைச்சர்கள், எம்.பிக்கள்,கல்வியாளர்கள், காந்தியவாதிகள் கலந்து கொள்கின்றனர்.
தென்னாப்பிரிக்க தலைவர்கள் பேட்ரிக் லெகோடா, பஹாட், இலா காந்தி, அஹமத்கத்ராடா, பார்பரா ஹோகன் மற்றும் கிரேக்க அதிபர் ஜார்ஜ் பாபன்டீரு, இத்தாலியபிரதமர் பிரான்ஸஸ்கோ ரூடெலி, பாகிஸ்தான் தேசிய அவாமி கட்சி தலைவர்அப்ஸன்டயர் அலிகான், ஜாம்பியா அதிபர் கென்னத் கெளண்டா ஆகியோர் இதில்பங்கேற்றுள்ளனர்.
தென்னாப்பிரிக்காவில் நெல்சன் மண்டேலாவுடன் இணைந்து போராட்டம் இனவிடுதலை போராட்டம் நடத்தியவரும் நோபல் பரிசு பெற்றவருமான பிஷப்தேஷ்மண்ட் டுடுவும் மாநாட்டில் கலந்து கொள்கிறார்.
சத்தியாகிரக போராட்டத்தின் சிறப்பை விளக்கும் விழாக்களை இந்த ஆண்டுமுழுவதும் நடத்தவும் காங்கிரஸ் கட்சி தீர்மானித்துள்ளது.












Click it and Unblock the Notifications