ஐ.டியே நாட்டின் எதிர்காலமா?: சி.என்.ராவ்
கொல்கத்தா:ஒரு நாட்டின் எதிர்காலத்தை தகவல் தொழில்நுட்பத் துறை மட்டும்தான் ஆதிக்கம் செலுத்தும் என்று கூற முடியாதுஎன திட்டக் கமிஷன் உறுப்பினரும், மத்திய அமைச்சரவைக்கான அறிவியல் ஆலோசனைக் குழுத் தலைவருமானடாக்டர் சி.என்.ராவ் கூறியுள்ளார்.
![]() |
மேற்கு வங்க மாநிலம் சாந்தி நிகேதனில் உள்ள விஸ்வ பாரதி பல்கலைக்கழகம் சி.என்.ராவுக்கு,இலக்கியத்திற்கான கெளரவ டாக்டர் பட்டத்தை (தேசிகோட்டம்) வழங்கியுள்ளது.
பட்டத்தைப் பெற்றுக் கொண்ட ராவ் நிகழ்ச்சியில் பேசுகையில், ஒரு நாட்டின் எதிர்காலமாக தகவல்தொழில்நுட்பத் துறை மட்டுமே விளங்கும் என்று கூற முடியாது. அப்படி இருக்கவும் முடியாது.
உலகமயமாக்கலும், வர்த்தகமயமாக்கலும், மாணவர்களிடையே தகவல் தொழில்நுட்பத் துறை குறித்த ஆர்வத்தைஅதிகரித்து விட்டன.
ஆண்டுதோறும் இந்தியாவில் 4 லட்சம் பேர் தகவல் தொழில்நுட்பத் துறையில் பட்டம் பெற்று வெளிவருகின்றனர். ஆனால் இது அமெரிக்காவில் 75,000 உள்ளது. அதனால்தான் அமெரிக்கர்களிடம் தரம் சிறப்பாகஉள்ளது.
ஆய்வாளர்களை அதிக அளவில் உருவாக்க விஸ்வபாரதி முன் வர வேண்டும். கொல்கத்தா இந்த விஷயத்தில்நாட்டின் முன்னணி நகரமாக மாறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார் ராவ்.
ராவ், 1200 ஆய்வு கட்டுரைகளையும், 37 நூல்களையும் வெளியிட்டுள்ளார். பிரதமருக்கான ஆலோசகராக உள்ளராவ் வட கிழக்கு பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.













Click it and Unblock the Notifications