மாமனார் செக்ஸ் தொல்லை-மருமகள் தற்கொலை

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில், மாமனாரின் செக்ஸ் தொல்லை மற்றும்கணவரின் சித்திரவதை தாங்க முடியாமல் நாலரை வயது குழந்தையின் தாய்தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து கணவரை போலீஸார் கைது செய்தனர்.செக்ஸ் வெறி பிடித்த மாமனார் தலைமறைவாகி விட்டார்.

குமரி மாவட்டம் குளச்சலைச் சேர்ந்தவர் தாவீதுவின் மகள் நிர்மலா ஜெயந்தி. 30வயதான ஜெயந்தியும், 29 வயதான தக்கலையைச் சேர்ந்த ரஞ்சித் சிங்கும் காதலித்துத்திருமணம் செய்து கொண்டனர்.

Nirmala with daugther

திருமணத்திற்குப் பிறகு நிகிலா என்ற பெண் குழந்தையும் பிறந்தது. அக்குழந்தைக்குதற்போது நாலரை வயதாகிறது. திருமணத்தின்போது நிர்மலாவுக்கு அவரதுகுடும்பத்திலிருந்து 45 பவுன் நகை, 2 லட்சம் ரொக்கப் பணம் கொடுத்தனர். பின்னர்குழந்தை பிறந்ததும் 3 பவுன் நகை போட்டனர்.

ஆனால், நகை, பணத்தையெல்லாம் ரஞ்சித்தும், அவரது தந்தை செல்வினும்வீணடித்து செலவழித்து விட்டனர். அதன் பிறகும் இருவரும் நிர்மலாவை கூடுதலாகவரதட்சணை வாங்கி வருமாறு கூறி கொடுமைப்படுத்தியுள்ளனர்.

Nirmala with her husband Ranjith and daugther

உச்சகட்டமாக நிர்மலாவுக்கு மாமனார் செல்வின் செக்ஸ் தொல்லை கொடுத்ததாகவும்கூறப்படுகிறது. இதனால் மனம் வெறுத்த நிர்மலா, கடந்த 26ம் தேதி தனது வீட்டில்தூக்கு போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து செல்வின், ரஞ்சித் சிங் மீது தக்கலை போலீஸில் தாவீது புகார்கொடுத்தார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு நிர்மால எழுதி வைத்திருந்த 10பக்க கடிதத்தை போலீஸார் கைப்பற்றினர். அதில் தனது மாமனாரும், கணவரும்செய்த கொடுமைகளை விளக்கியிருந்தார்.

இதையடுத்து ரஞ்சித் சிங்கை போலீஸார் கைது செய்தனர். ஆனால் செல்வின்தலைமறைவாகி விட்டார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+