சென்னை-கோவை ரயில் போக்குவரத்து சீரானது
Subscribe to Oneindia Tamil
சென்னை:ஆம்பூர் அருகே சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டதால் ஏற்பட்ட தண்டவாள பாதிப்பு சரி செய்யப்பட்டுவிட்டது. இதையடுத்து நேற்று இரவு 9 மணிக்கு ரயில் போக்குவரத்து சீரடைந்தது.
![]() |
கோவையிலிருந்து நேற்று முன்தினம் இரவு சென்னைக்குக் கிளம்பிய சேரன் எக்ஸ்பிரஸ் ரயில், நேற்றுஅதிகாலை, வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே வந்தபோது தடம் புரண்டது.
இதில் 5 முன் பதிவு பெட்டிகள் கவிழ்ந்தன. இந்த விபத்தில் 70 பயணிகள் காயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாகஉயிரிழப்பு ஏதும் இல்லை. தண்டவாளத்தில் ஏற்பட்டிருந்த விரிசலே இதற்குக் காரணம் என கண்டறியப்பட்டது.
இது சதிச் செயல் அல்ல என்றும் தண்டவாளத்தில் தானாக ஏற்பட்ட விரிசல்தான் காரணம் எனத் தெரிய வந்ததால்,விரிசலை சரி செய்யும் பணியும், சேதமடைந்த தண்டவாளப் பகுதிகளை சரி செய்யும் பணியும் முடுக்கிவிடப்பட்டன.
இப்பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து நேற்று இரவு 9 மணி முதல் இப்பாதையில் ரயில் போக்குவரத்துசீரானது.













Click it and Unblock the Notifications