மாமியார்-மருமகன் கள்ளக் காதல்:உல்லாசத்தை படம் எடுத்த பொதுஜனம்

Subscribe to Oneindia Tamil

செங்கல்பட்டு:செங்கல்பட்டில், மாமியாரும், மருமகனும் உல்லாசமாக இருந்ததை ஊர் மக்கள் வீடியோவில் படமாக்கினர். இதனால் இரு தரப்புக்கும் இடையேகடும் மோதல் ஏற்பட்டது.

செங்கல்பட்டு, ராமபாளையம் காட்டுநாயக்கன் தெருவைச் சேர்ந்தவர் இந்திரா. இவருக்கு வயது 40. இவரது கணவர் மணி. 5 ஆண்டுகளுக்குமுன்பே இறந்து விட்டார். புவனேஸ்வரி என்ற 18 வயது மகள் இந்திராவுக்கு உள்ளார்.

அவரை குன்றத்தூரைச் சேர்ந்த கங்காதரன் என்ற 26 வயது வாலிபருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தார் இந்திரா.கங்காதரன் டெய்லராக உள்ளார். அத்தோடு அவ்வப்போது ஆட்டோவும் ஓட்டி சம்பாதித்து வந்தார்.

கல்யாணத்திற்குப் பிறகு மனைவியிடம் காதலாக இருப்பதை விட்டு விட்டு, மாமியார் இந்திரா மீது காமக் கண்ணைத் திருப்பிய கங்காதரன்,அவருடன் கள்ளக்காதலை ஏற்படுத்திக் கொண்டார்.

அடிக்கடி செங்கல்பட்டுக்கு வந்து விடுவார். வீட்டைப் பூட்டிக் கொண்டு இருவரும் உல்லாசமாக இருப்பார்களாம். இதனால் அப்பகுதியினருக்குசந்தேகம் வந்துள்ளது. என்ன நடக்கிறது என்பதை ரகசியமாக கண்காணித்த அவர்கள், மாமியாரும், மருமகனும் வீட்டைப் பூட்டிக் கொண்டு,ஆபாசப் படம் பார்த்துக் கொண்டே உல்லாசமாக இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து இந்திராவின் வீட்டு உரிமையாளர் மோகன் அவரைக் கூப்பிட்டுக் கண்டித்துள்ளார். ஆனால் அதை இந்திரா கண்டுகொள்ளவில்லை.இதையடுத்து ஊர் மக்கள் ஒன்று கூடி இவர்களை என்ன செய்யலாம் என்று ஆலோசித்தனர்.

அப்போது இவர்கள் இருவரும் ஜாலியாக இருப்பதை வீடியோவில் பதிவு செய்து, ஊர் முழுக்கக் காட்டுவோம். அப்போதுதான் இவர்கள்திருந்துவார்கள் என அப்பகுதி கவுன்சிலர் அலமேலுவின் கணவர் வெள்ளையன் மற்றும் ஊர்ப் பெரியவர் செல்வம் ஆகியோர் ஆலோசனைகூறினர்.

இதையடுத்து மறுமுறை கங்காதரனும், இந்திராவும் ஜாலியாக இருப்பதை ஜன்னல் வழியாக வீடியோவில் பதிவு செய்தனர். பின்னர் இந்திராவின்மகள் புவனேஸ்வரிக்குத் தகவல் கொடுத்து வரவழைத்தனர். இதேபோல, கங்காதரனின் சகோதரர்கள் வெங்கடேசன், ராமு ஆகியோரைவரவழைத்தனர்.

அவர்களிடம் இனிமேலும் இவர்களை குடி வைக்க முடியாது என்று கூறியுள்ளனர். இதுதொடர்பாக இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுஅடிதடியாக மாறியது.

இந்த மோதலில் கங்காதரன், இந்திரா ஆகியோர் கடுமையாக தாக்கப்பட்டனர். இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து கங்காதரன், இந்திராவைமீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களைத் தாக்கியதாக மோகன், வாசு, கண்ணன் ஆகியோரை கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+