அண்ணா நினைவுநாள்: கருணாநிதி, ஜெ அஞ்சலி
சென்னை:பேரறிஞர் அண்ணாவின் 38வது நினைவு தினத்தையொட்டி சென்னை கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர் கருணாநிதி,அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
முன்னாள் முதல்வரும், திமுக நிறுவனருமான பேரறிஞர் அண்ணாவின் 38வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இதையொட்டிதிமுக சார்பில் முதல்வர் கருணாநிதி தலைமையில் இன்று மெளன ஊர்வலம் நடந்தது.
சேப்பாக்கம் சட்டமன்றத் தொகுதி அலுவலகத்திலிருந்து திறந்த வேனில் முதல்வர் கருணாநிதி அண்ணா நினைவிடம் வரை சென்றார். பின்னர்நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அவருடன் அன்பழகன், ஆற்காடு வீராசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் திமுகவினர் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
இதேபோல அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமையில் அதிமுகவினரும் திரளாக அண்ணா நினைவிடம் சென்று மலர் வளையம்வைத்து அஞ்சலி செலுத்தினர்.
தி.க. தலைவர் கி.வீரமணி, போட்டி மதிமுக பொதுச் செயலாளர் செஞ்சி ராமச்சந்திரன் உள்ளிட்ட தலைவர்களும் அண்ணா நினைவிடத்தில்அஞ்சலி செலுத்தினர்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் மதிமுகவினர் இன்று மாலை மெளன ஊர்வலம் நடத்தி அண்ணா நினைவிடத்தில் அஞ்சலிசெலுத்துகின்றனர்.












Click it and Unblock the Notifications