தேர்தல்-தடை விதிக்க நீதிமன்றம் மீண்டும் மறுப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:சென்னை மாநகராட்சித் தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் தெரிவித்துள்ளது. அதிமுக தொடர்ந்தவழக்கில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு கூறி தேர்தல் ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி மறு தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும், தேர்தல் ஆணையரை மாற்ற உத்தரவிட வேண்டும் என்று கோரி அதிமுக சார்பில்எம்.எல்ஏ. ஜெயக்குமார் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி சந்துரு ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போதுஅரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜா கலிபுல்லா கூறுகையில், உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றத்திற்கு அதிகாரம்இல்லை.

மேலும் தேர்தல் பார்வையாளர்களை நியமிக்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை. இதை தேர்தல் ஆணையம்தான் செய்ய வேண்டும் என்றுவாதிட்டார்.

அதிமுக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜோதி, தேர்தல் ஆணையராக சந்திரசேகரன் செயல்படுவதில் அதிமுகவுக்கு உடன்பாடு இல்லை. அவரதுதலைமையில், தேர்தல் முறையாக நடைபெறும் என்பது சந்தேகம்தான். எனவே தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோ>னார்.

ஆனால் இந்தக் கோரிக்கையை நிராகரித்த தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, உள்ளாட்சித் தேர்தலுக்குத் தடை விதிக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லைஎன்று கூறி தடை விதிக்க மறுத்து விட்டார்.

மேலும், தேர்தல் ஆணையர் சந்திரசேகரன் மீது நேரடிக் குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டிருப்பதால் அவர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றுகூறி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். வழக்கு விசாரணை வருகிற 9ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+