ஓமலூர் மாணவி சாவு-நீதி விசாரணைக்கு உத்தரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:சேலம் மாவட்டம் ஓமலூரில் பள்ளி மாணவி மர்மச் சாவு குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியைக் கொண்ட கமிஷனை தமிழகஅரசு அறிவித்துள்ளது.
ஓமலூர் பாத்திமா பள்ளியில் படித்து வந்த மாணவி சுகன்யா சில மாதங்களுக்கு முன்பு பள்ளி வளாகத்தில் உள்ள கிணற்றில் பிணமாக மிதந்தார்.இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஓமலூர் பொதுமக்கள் பள்ளியை சூறையாடினர். பள்ளிக்கூடம் மூடப்பட்டது. சிலர் கைது செய்யப்பட்டனர். சமீபத்தில்தான் பள்ளி மீண்டும்திறக்கப்பட்டது.
இந் நிலையில், ஒரு நபர் விசாரணைக் கமிஷனை தமிழக அரசு அறிவித்துள்ளது. மாணவி இறந்தது தொடர்பான காரணிகளை இந்த விசாரணைக்கமிஷன் ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை கொடுக்கும்.
ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கே.சாமித்துரை இந்த விசாரணையை நடத்துவார்.












Click it and Unblock the Notifications