தீவிர பிரசாரத்துக்கு ஆயத்தமாகும் விஜயகாந்த்!
சென்னை:சென்னை மாநகராட்சியின் 100 வார்டுகளுக்கான மறு தேர்தல் பிரசாரத்திற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆயத்தமாகி வருகிறார்.
சென்னை மாநகராட்சியின் 100 வார்டுகளுக்கும் வருகிற 18ம் தேதி மறு தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் திமுக கூட்டணியினர்அனைவரும் போட்டியிடுகின்றனர். மறுபக்கம் எதிர்க்கட்சித் தரப்பில் பாஜக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகள் மட்டுமே உள்ளன.
அதிமுகவும், மதிமுகவும் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. எனவே ஆளுங்கட்சித் தரப்பு படு உற்சாகமாக உள்ளது. கடந்தமுறையைப் போல சிரமப்படாமல், இந்த முறை எளிதாக 100 வார்டுகளிலும் வெற்றி பெற்று விடலாம் என ஆளுங்கட்சித் தரப்பில் எண்ணம்நிலவுகிறது.
ஆனால் போட்டியை கடுமையாக்க விஜயகாந்த் திட்டமிட்டுள்ளார். இதுவரை இல்லாத அளவுக்கு மிகத் தீவிரமாக 100 வார்டுகளிலும் அனல்பறக்கும் பிரசாரத்திற்கு அவர் ஆயத்தமாகி வருகிறார்.
95 வார்டுகளுக்கான வேட்பாளர்களை அறிவித்து விட்ட விஜயகாந்த் அடுத்து பிரசாரத்திற்கு திட்டமிட்டு வருகிறார். கடந்த முறை வாங்கியஓட்டுக்களை விட இந்த முறை கூடுதலாக வாக்குகளை அள்ளிக் காட்டும் முனைப்பில் உள்ளார்.
மேலும் தனக்கு அதிமுக, மதிமுகவினரின் மறைமுக ஆதரவு கிடைக்கும் என்றும் விஜய்காந்த் கணக்கு போடுகிறார்.
100 வார்டுகளிலும் வீதி வீதியாக சென்று விஜயகாந்த் பிரசாரம் செய்யவுள்ளார். கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு விஜயகாந்த் பிரசாரம் செய்யக்கூடும் என்று தெரிகிறது. இதற்காக பிரசார வேனும் தயாராக உள்ளது.
பிரசாரத் திட்டம் குறித்து கட்சியின் சென்னை மாவட்ட நிர்வாகிகளுடன் விஜயகாந்த் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.












Click it and Unblock the Notifications