முதல்வர் விழாவில் துணை நடிகையால் சலசலப்பு
சென்னை:சென்னை கலைஞர் அரங்கில் நடந்த செஞ்சி ராமச்சந்திரன் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் கருணாநிதி முன்புவிழுந்து புரண்டு துணை நடிகை கதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
போட்டி மதிமுக பொதுச் செயலாளர் செஞ்சி ராமச்சந்திரனின் மகள் திருமண வரவேற்புக்கு அண்ணா அறிவாலயம் பின்புறம் உள்ள கலைஞர்அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்ச்சியில் முதல்வர் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென ஒரு பெண் நைட்டியுடன் உள்ளே புகுந்தார். முதல்வர் பேசிக் கொண்டிருந்தமேடைக்கு முன்பு வந்த அவர் தலைவரே என் காலைப் பாருங்க, என்னைக் காப்பாத்துங்க என்று கூறி கூச்சலிட்டார்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்பெண்ணை போலீஸார் அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால் அவர் வராமல் கீழே விழுந்துஉருண்டு புரண்டு கதறி அழுதார்.
இருப்பினும் போலீஸார் மிகுந்த சிரமப்பட்டு அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அவரது பெயர் மலர்க்கொடி. காரைக்குடியைச் சேர்ந்தவர். துணைநடிகை. வடபழனியில் வசித்து வரும் மலர்க்கொடியின் கால்கள் அரசு மருத்துவமனையில் கொடுக்கப்பட்ட தவறான சிகிச்சை காரணமாக வீங்கிப்போயுள்ளது.
இதுதொடர்பாக ஏற்கனவே மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுக்கு அவர் புகார் கூறி கடிதம்அனுப்பியிருந்தார். இதையடுத்து அவருக்கு அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார் ராமச்சந்திரன்.
இந்த நிலையில் நேற்று முதல்வர் விழாவில் கலந்து கொண்டு அவரது கவனத்தை ஈர்க்க முயலும் வகையில் திடீரென புகுந்து கூச்சல் போட்டுள்ளார்மலர்க்கொடி.












Click it and Unblock the Notifications