சென்னை தேர்தல்: மனுத்தாக்கல் இன்றே கடைசி
Subscribe to Oneindia Tamil
சென்னை:சென்னை மாநகராட்சிக்கான மறு தேர்தலில் போட்டியிட விரும்புவோர் வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும்.
சென்னை மாநகராட்சியின் 100 வார்டுகளுக்கு மறு தேர்தல் நடைபெறுகிறது. 18ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. தேர்தலில் போட்டியிட,வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும்.
இன்று மாலை 3 மணி வரை வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படும். மேயர் பதவியிலிருந்து விலகிய மா.சுப்ரமணியன் இன்று மனு தாக்கல்செய்கிறார். ஏராளமான சுயேச்சைகளும், திமுக கூட்டணிக் கட்சியினரும் இன்று வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளனர்.
இந்தத் தேர்தலை அதிமுகவும், மதிமுகவும் புறக்கணித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தேமுதிக 100 வார்டுகளிலும் போட்டியிடுகிறது.












Click it and Unblock the Notifications