டெல்லி போலீஸ்-தீவிரவாதிகள் துப்பாக்கி சண்டை

Subscribe to Oneindia Tamil

டெல்லி:டெல்லியில் பலத்த துப்பாக்கி சண்டைக்குப் பின் 4 தீவிரவாதிகள் பிடிபட்டுள்ளனர். இவர்கள்ஜெய்ஷ்-ஏ-முகம்மத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இவர்கள் டில்லி பராகம்பா சாலையில் இருந்து தீன்தயாள் மார்க்கிற்கு வருவதாக ரகசிய தகவல்கிடைத்ததையடுத்து அவர்களை போலீசார் சுற்றி வளைத்தனர்.

அப்போது தீவிரவாதிகள் போலீசாரை நோக்கிச் சுட்டனர். பதிலுக்கு போலீசாரும் சுட்டனர். இதனால் அங்கும்பெரும் பதற்றம் ஏற்பட்டது.

சுமார் 30 நிமிடங்கள் நடந்த துப்பாக்கிச் சண்டைக்குப் பின் நான்கு பேரும் சுற்றி வளைத்து கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 3 கிலோ ஆர்.டி.எக்ஸ். வெடிமருந்து, 6 கிரனைட் குண்டுகள், நான்குடெட்டோனேட்டர்கள், 10,000 அமெரிக்க டாலர், ரூ. 50,000 இந்திய பணம். ஒரு டைமர் ஆகியவை பறிமுதல்செய்யப்பட்டன.

கைதான 4 பேரில் ஷாகித் என்பவன் பாகிஸ்தானின் சியால்கோட் நகரைச் சேர்ந்தவன். பஷீர் அகமது, பயாஸ்லோன் மற்றும் அப்துல் மஜித் ஆகியோர் காஷ்மீரைச் சேர்ந்தவர்கள்.

இவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+