பாகிஸ்தானில் இந்து என்ஜீனியர் படுகொலை
கராச்சி:பாகிஸ்தானில் இந்து சமூகத்தைச் சேர்ந்த என்ஜினியர் கடத்தி செல்லப்பட்டு தலை துண்டித்து படுகொலைசெய்யப்பட்டார்.
பாகிஸ்தானில், ஐதராபாத் நகரில் கணேஷ் என்பவர், கடந்த ஆகஸ்டு மாதம் கடத்தப்பட்டார். ஹர்கத் உல்முஜாகிதீன் என் ற தீவிரவாத அமைப்பை சேர்ந்த 3 பேர் போலீஸ் உடையில் வந்து அவரைக் கடத்திச் சென்றனர்.
கணேஷ் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீஸார், கணேஷைக் கண்டுபிடிக்க விசாரணையைதொடங்கினர்.
ஆனால், அதில் கணேஷ் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், கணேஷின் உடலை தீயிட்டு கொளுத்தி, பின் அரைகுறையாக கருகியஉடலை இடுகாட்டில் புதைத்துள்ளனர். இது தொடர்பாக ஒரு பகுதியில் சோதனை நடத்திய போது, அங்குசந்தேகத்திற்குரிய 3 பேர் பிடிபட்டனர்.
அவர்களிடமிருந்து கைத் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. ஒரு அடக்க தலத்தை சோதனை செய்து தோண்டிபார்த்தபோது கணேஷின் உடல் புதைக்கப்பட்டிருந்தது என்றனர்.
இதுகுறித்து அகில பாகிஸ்தான் சிறுபான்மையினர் கூட்டணி தலைவர் ஷபாஸ் பட்டி கூறுகையில், சிந்துமாநிலத்தில் இந்துக்கள் கடத்தப்பட்டு கொன்று வருவது அதிகரித்து வருகிறது. இது மக்கள் மனத்தில் பீதியைஏற்படுத்தியுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications