திருநெல்வேலிக்கு புதிய போலீஸ் கமிஷனர்
சென்னை:திருநெல்வேலி மாநகர காவல்துறை ஆணையராக அசோகுமார் தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
நெல்லை காவல்துறை ஆணையராக ரவி என்பவர் இருந்து வந்தார். குற்றாலத்தில் குடித்து விட்டு ஜட்டியுடன்வலம் வந்த ரவி பொது மக்களிடம் ஜட்டியுடனேயே தகராறு செய்து பிடிபட்டார்.
இதையடுத்து அவர் ஆணையர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.அவரைத் தொடர்ந்து ஆணையராக யாரும் நியமிக்கப்படாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில், நெல்லை ஆணையராக அசோக் குமார் தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதுவரை திருச்சிஎஸ்.பியாக இருந்து வந்தார். டிஐஜியாக பதவி உயர்வு கொடுக்கப்பட்டு நெல்லை ஆணையராக அவர்நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் தவிர மேலும் சில காவல்துறை அதிகா>களும் மாற்றப்பட்டுள்ளனர். காவல் பயிற்சிக் கல்லூரி டிஐஜியாகராஜேஷ் தாஸ், ராமநாதபுரம் சரக டிஐஜியாக கிருஷ்ணமூர்த்தி, காவல்துறை அகாடமி டிஐஜியாக அபய்குமார்சிங் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருச்சி துணை ஆணையர் ராஜேசகரன், புறநகர் எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார். திருச்சி சட்டம் ஒழுங்குதுணை ஆணையராக கலியமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications