தம்பி மனைவியை கேவலமாய் மிரட்டிய அண்ணன்!
சென்னை:தம்பி மீது போடப்பட்ட விவகாரத்து வழக்கை வாபஸ் பெற வேண்டும். ரூ. 10 லட்சம் தர வேண்டும்.இல்லாவிட்டால், நீயும், நானும் நெருக்கமாக இருப்பது போன்ற படத்தை இன்டர்நெட்டில் போடுவேன்,போஸ்டர் அடித்து ஒட்டுவேன் என மிரட்டிய நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
சென்னை பெரம்பூரை சேர்ந்தவர் தேவி (26). அதே பகுதியை சேர்ந்த பாஸ்கர் என்பவரை 2 ஆண்டுகளுக்குமுன் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் பாஸ்கர் மற்றும் அவரது குடும்பத்தார் வரதட்சணைகேட்டு கொடுமைப்படுத்தியுள்ளனர்.
இதையடுத்து கணவரை விட்டுப் பிரிந்து தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார் தேவி. மேலும் விவகாரத்து கோரிவழக்கும் தொடர்ந்தார். இதையடுத்து வழக்கை வாபஸ் பெறுமாறு பாஸ்கர் குடும்பத்தினர் வற்புறுத்தினர்.ஆனால் மறுத்து விட்டார் தேவி.
பாஸ்கருக்கு ஆதரவாக அவரது அண்ணன் மகேந்திரனின் குடும்பமும் தேவியை மிரட்டியுள்ளது. சிலநாட்களுக்கு முன் செல்போன் மூலம் தேவியை தொடர்பு கொண்டு பேசிய மகேந்திரன்,
வழக்கை உடனடியாக வாபஸ் பெற்று விடு. ரூ. 10 லட்சம் பணமும் கொடு. இல்லாவிட்டால், நீயும் நானும்சேர்ந்திருப்பதை போல படம் எடுத்து வைத்துள்ளேன்.
அதை இன்டர்நெட்டில் போட்டு விடுவேன். போஸ்டர் அடித்து உன் தெருவில் ஒட்டுவேன். இதனால் உன்குடும்ப கெளரவம் காற்றில் பறக்கும் என மிரட்டியுள்ளார்.
இதை தொடர்ந்து தேவி போலீஸில் புகார் கொடுத்துள்ளார், அதில் என் கணவர் வரதட்சனை கேட்டு மிகவும் துன்புறுத்தியதால், தாய் வீட்டிற்கு வந்துவிட்டேன். விவாகரத்து கேட்டுவழக்கு தொடர்ந்துள்ளேன். இதனால் கணவர் குடும்பத்தினர் என்னை மிரட்டினர்.
கணவ>ன் அண்ணன் மகேந்திரன், நான் கணவருடன் இருக்கும் படத்தில், கணவருக்கு பதில் தன் படத்தைகிராபிக்ஸ் மூலம் இணைத்து, படமாக வைத்துள்ளார்.
இதன் மூலம் நான் அவருடன் நெருக்கமாக இருந்து புகைப்படம் எடுத்துகொண்டதாகவும், என்னைதவறானவள் என சித்தரித்தும் என்னை கேவலப்படுத்த முயல்கிறார்.
வழக்கை வாபஸ் வாங்குவதோடு, ரூ. 10 லட்சம் தரவேண்டும், இல்லாவிட்டால் இன்டர்நெட்டில் அந்தப்போட்டு விடுவதாக மிரட்டுகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுள்ளார்.
புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார் மகேந்திரனைத் தேடி வருகின்றனர். அவர் எஸ்கேப்ஆகியுள்ளார்.












Click it and Unblock the Notifications