இட ஒதுக்கீடு கோரி திமுக மகளிர் அணி பேரணி
Subscribe to Oneindia Tamil
சென்னை:நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு சட்ட மசோதாவை நிறைவேற்றக் கோரி திமுக மகளிர் அணி சார்பில்தமிழகம் முழுவதும் பேரணி நடத்தப்பட்டது.
சென்னை மற்றும் 17 மாவட்டங்களில் நடந்த இந்தப் பேரணியில், 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஒவ்வொரு மாவட்டத்தில்மாநில அமைச்சர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் பேரணிகளைத் தொடங்கி வைத்தனர்.
மகளிர் இட ஒதுக்கீடு சட்ட மசோதாவை உடனடியாக நிறைவேற்றக் கோரி பேரணியில் கலந்து கொண்டவர்கள் கோஷமிட்டனர்.












Click it and Unblock the Notifications