22 ஆண்டு விசாரணை-1 வார தண்டனை

Subscribe to Oneindia Tamil

சென்னை:சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் கடந்த 22 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவருக்கு 1 வாரம் தண்டனை அளித்து தீர்ப்புஅளிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் முரளி. மாநகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து கொடுக்கும் வேலையில்ஈடுபட்டிருந்தார்.

கடந்த 1985ம் ஆண்டு போலியான பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை அவர் தயாரித்து விநியோகித்தார். இதுதொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.சென்னை எழும்பூர் கூடுல் முதன்மை குற்றவியல் நடுவர் மன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. கடந்த 22 வாரங்களாக வழக்கு நடந்ததுகுறிப்பிடத்தக்கது.

2 நாட்களுக்கு முன்புதான் இந்த வழக்கில் நீதிபதி ஜெகன்னாதன் தீர்ப்பு அளித்தார். குற்றவாளி முரளிக்கு ஒரு வார சிறை தண்டனை மற்றும் ரூ. 2ஆயிரத்து 500 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

22 வருடங்களாக இழுத்துக் கொண்டிருந்த வழக்கில் ஒரே ஒரு வாரம் மட்டும் குற்றவாளிக்கு தீர்ப்பு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. குற்றவாளிசிறையிலிருந்த காலத்தை தண்டனைக் காலத்திலிருந்து கழித்துக் கொள்ள வேண்டும் என நீதிபதி கூறியதால் முரளி விடுவிக்கப்பட்டார்.

முரளி தனது முகவரியை மாற்றிக் கொடுத்திருந்ததால் அவரைக் கண்டுபிடிக்கவே சில ஆண்டுகள் ஆனதாம். இதனால்தான் இந்த வழக்கு இத்தனைகாலம் நீடித்து விட்டதாக போலீஸ் தரப்பில்கூறப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+