தமிழகத்தில் ஹெல்மட் கட்டாயமாகிறது!
சென்னை:தமிழகத்தில் இரு சக்கர வாகனங்களை ஓட்டுவோர் கட்டாயம் ஹெல்மட் அணிவதை உறுதிப்படுத்துமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த டிராபிக் ராமசாமி மற்றும் தென்னிந்திய ஆட்டோமொபைல் சங்கம் சார்பில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், இரு சக்கர வாகனம் ஓட்டுவோர் கட்டாயம் ஹெல்மட் அணிய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரியிருந்தனர்.
இந்த மனுவை நீதிபதிகள் முகோபாத்யாயா மற்றும் சுதாகர் ஆகியோர் விசாரித்தனர்.
அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வாதிடுகையில்,
இந்திய மோட்டார் வாகன சட்டப் பி>வு 129வது பி>வின்படி, இரு சக்கர வாகனங்களை ஓட்டுவோர் கண்டிப்பாக ஹெல்மட் அணிய வேண்டும்என்பதை அமல்படுத்த வேண்டியது மாநில அரசுகளின் கடமை.
பல மாநிலங்களில் இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் இது நடைமுறைப்படுத்தப்படவில்லை. எனவே தமிழகத்திலும் இதைகட்டாயப்படுத்த உத்தரவிட வேண்டும் என்றனர்.
அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடுகையில், இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் ஹெல்மட் அணிய வேண்டும் என்பதைஅமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இன்னும் 2 மாதங்களில் இது அமல்படுத்தப்படும் என்றார்.
இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள், 2 மாதங்களில் கட்டாயமாக்குவோம் என்பது நீண்ட காலம் போலத் தெரிகிறது. மேலும், ஹெல்மட்அணியாவிட்டால் அவர்களுக்கு என்ன தண்டனை என்பதும் தெளிவாக சொல்லப்படவில்லை.
எனவே அதுகுறித்தும் அரசு தெளிவுபடுத்த வேண்டும். ஹெல்மட் அணிவதை இன்னும் 3 வாரத்துக்குள் கட்டாயமாக்கி உத்தரவிட வேண்டும் என்றுஉத்தரவிட்டனர். பின்னர் விசாரணை 19ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications