கூடங்குளம் அணு நிலையம்-மேதா உண்ணாவிரதம்

Subscribe to Oneindia Tamil

Medha Patkarதிருநெல்வேலி:கூடங்குளத்தில் அணு மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரபல சமூக சேவகி மேதா பட்கர்இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்ய உதவியோடு இந்த அணு மின் நிலையம் கட்டப்பட்டுவருகிறது. இங்கு 2 அணு உலைகளை அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், சமீபத்திய ரஷ்ய அதிபர் புடினின் விஜயத்தின்போது இங்குமேலும் 4 அணு உலைகளை கட்டித் தர ரஷ்யா ஒப்புக் கொண்டது.

இதனால் சுற்றுசூழல் பாதிக்கப்படும் என்று கூறி போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந் நிலையில் மனிதஉரிமை பாதுகாப்பு இயக்கம் சார்பில் இன்று சமூக சேவகி மேதா பட்கர் தலைமையில் இன்று உண்ணாவிரதபோராட்டம் நடந்தது.

இதில் கூடங்குளம் பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். போராட்டத்துக்கு ஆதரவு தரும்வகையில் இப் பகுதியில் கடைகளும் அடைக்கப்பட்டன. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும்போடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+