தினமும் 2 லட்சம் புதிய செல்போன் இணைப்புகள்
சென்னை:இந்தியாவில் தினமும் சராசரியாக 2 லட்சம் பேர் புதிய செல்போன் இணைப்புகளை பெற்று வருகின்றனர்.
தற்போது மொத்தம் உள்ள இணைப்புகளின் எண்ணிக்கை 19.67 கோடியாகும்.
ஜனவரி மாதம் புதிதாக 67.8 லட்சம் இணைப்புகள் கொடுக்கப்பட்டன. இவற்றில் ஜிஎஸ்எம் இணைப்புகளின் எண்ணிக்கை 49.9 லட்ச, சிடிஎம்ஏஇணைப்புகள் 17.9 லட்சம்.
அதேசமயம், சாதாரண தொலைபேசி வைத்திருப்போரின் (லேண்ட் லைன்) எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. தினமும் சராசரியாக5,000 வாடிக்கையாளர்கள் தங்களது சாதாரண தொலைபேசி இணைப்புகளை சரண்டர் செய்து வருவதாக கூறப்படுகிறது.
அதே போல பிராட்பேண்ட் இன்டர்நெட் இணைப்பு பெறுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 2006ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரைமொத்தம் 20.3 லட்சம் பேர் பிராட் பேண்ட் இணைப்பு பெற்றிருந்தனர். நாட்டில் 762 நகரங்களில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் பிராட்பேண்ட்வசதிகளை வழங்கி வருகிறது.
பாரத் நிர்மான் திட்டத்தின் கீழ் மொத்தம் உள்ள 66,822 கிராமங்களில் இதுவரை 38,795 கிராமங்களில் கிராம பொது தொலைபேசி வசதி செய்துதரப்பட்டுள்ளது. மீதம் உள்ள கிராமங்களுக்கு நவம்பர் மாத இறுதிக்குள் இந்த வசதி செய்து தரப்படும்.












Click it and Unblock the Notifications