கோவை ஐடி பார்க்-24ம் தேதி கருணாநிதி அடிக்கல்

Subscribe to Oneindia Tamil

கோவை:கோவையில் ரூ. 300 கோடி மதிப்பில் உருவாக்கப்படவுள்ள தகவல் தொழில்நுட்பப் பூங்காவுக்கான (ஐ.டி. பார்க்) அடிக்கல் நாட்டு விழா வரும்24ம் தேதி நடைபெறுகிறது. முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார்.

கோவையில் மாநில ஊரகத் தொழில்துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, மாவட்ட ஆட்சித் தலைவர் நீரஜ் மிட்டல் ஆகியோர் கூட்டாகசெய்தியாளர்களிடம் பேசுகையில், 24ம் தேதி முதல்வர் கருணாநிதி கோவை வருகிறார். அன்று காலை 10 மணிக்கு வ.உ.சி. பூங்காவில்நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறார்.

வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் 2வது கட்ட திட்டத்தை அவர் தொடங்கி வைக்கிறார். பின்னர் 12 துறைகள் சார்பில்பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்குகிறார்.

கோவைக்கு குடிநீர் வழங்கும் பில்லூர் குடிநீர்த் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்.

அதில் முக்கியமானகு, ரூ. 300 கோடியில் அமையவுள்ள கோவை ஐ.டி. பூங்கா திட்டமாகும்.

மாலையில் பாரதியார் பல்கலைக்கழக வெள்ளி விழாவில் முதல்வர் பங்கேற்கிறார். நிகழ்ச்சியில் பல்கலைக்கழகம், முதல்வருக்கு செம்மொழிச்செம்மல் என்ற விருதினை வழங்கி கெளரவிக்கிறது.

குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இந்த விருதினை முதல்வருக்கு வழங்குவார் என்று தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+