ப்ரீ பெய்டு ஆட்டோ கட்டணம் கிடுகிடு உயர்வு
சென்னை:சென்னை நகரில் ப்ரீ பெய்டு ஆட்டோ கட்டணம் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. வழக்கமான ஆட்டோ கட்டணத்தை விடஇந்தக் கட்டணம் அதிகமாகும்.
எழும்பூர் மற்றும் சென்னை சென்டிரல் ரயில் நிலையங்கள் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையம் ஆகிய இடங்களில்தற்போது ப்ரீ பெய்டு ஆட்டோ சேவை நடைமுறையில் உள்ளது.
இங்கு தற்போது வசூலிக்கப்படும் ஆட்டோ கட்டணத்தை மார்ச் 1ம் தேதி முதல் உயர்த்தி மாநிலபோக்குவரத்துத் துறைஉத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட ஆட்டோ சங்கங்களுடன் பேச்சு நடத்தப்பட்டு பின்னர் இந்தகட்டண உயர்வு தீர்மானிக்கப்பட்டது.
புதிய கட்டணப்படி குறைந்தபட்ச கட்டணமாக முதல் இரண்டு கிலோமீட்டர்களுக்கு ரூ. 21 வசூலிக்கப்படும். அதன் பிறகுஒவ்வொரு கூடுதல் கிலோமீட்டருக்கும் ரூ. 9 வசூலிக்கப்படும்.
விமான நிலையத்திலும் இந்த ப்ரீபெய்டு ஆட்டோ கட்டணத்தை அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
சாதாரண ஆட்டோக்களில் தற்போது குறைந்தபட்ச கட்டணமாக ரூ. 14 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருகிலோமீட்டருக்கும் கூடுதலாக ரூ. 6 வசூலிக்கப்படுகிறது. ஆனால் ப்ரீபெய்டு ஆட்டோக்களில் இந்தக் கட்டணம் அதிகம்என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சேவைக்கு பொதுமக்களிடம் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து நகரின் பிற பகுதிகளுக்கும் இதுவிரிவுபடுத்தப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications