காவிரி, புலிகள்- அமைச்சரவை ஆலோசனை
சென்னை:காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு குறித்து தமிழக அரசு நடத்தவுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டம், விடுதலைப் புலிகளின்ஆயுதக் கடத்தல் உள்ளிட்டவை குறித்து முதல்வர் கருணாநிதி தலைமையில் இன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில்விவாதிக்கப்பட்டது.
வருகிற 19ம் தேதி காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புதொடர்பாக விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு தமிழக அரசுஏற்பாடு செய்துள்ளது. இந்த நிலையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் கருணாநிதி தலைமையில்அமைச்சரவைக் கூட்டம் நடந்தது.
இந்தக் கூட்டத்தில் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும், 2007-08ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை, சட்டம் ஒழுங்கு, விடுதலைப் புலிகளின் ஆயுதக் கடத்தல்உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
சமீபத்தில் அமைச்சரவையில் இலாகா மாற்றம் நடந்த பின்னர் நடந்த முதல் அமைச்சரவைக் கூட்டமாகும் இது.












Click it and Unblock the Notifications