கோவை பல்கலையில் மாணவர்கள் அஞ்சலி

Subscribe to Oneindia Tamil

கோவை:தர்மபுரி பஸ் எரிப்பில் பலியான கோகிலவாணி, ஹேமலதா, காயத்ரி ஆகிய மூன்று பேரும் ஒரே நாளில் கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில்சேர்ந்தவர்கள்.

அதே போல மூவரும தங்கி இருந்ததும் ஒரே அறையில் தான். பஸ் எரிக்கப்பட்டபோது மூவரும் சேர்ந்தே பலியாகியுள்ளனர். மூவருக்கும் வயதும்19.

Coimbatore Agri Univ. students pay homage to students killed in bus burningஒரே அறையில் தங்கி, ஒரே வகுப்பில் படித்த மூன்று மொட்டுக்களை 10 நிமிடத்தில் எரித்து கரியாக்கிவிட்டது கொலைகார கும்பல்.

பல்கலை மாணவர்கள் அஞ்சலி:இந்த வழக்கில் தீர்ப்பு வெளியானவுடன் கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மகிழ்ச்சியும் சோகமும் ஒரு சேர படித்தது. தீர்ப்பு வந்ததுமகிழ்ச்சி தான் என்றாலும் அந்த கொடூர சம்பவத்தின் நினைவுகள் பல்கலைக்கழகத்தை சோகத்தில் ஆழ்த்திவிட்டது.

கொல்லப்பட்ட 3 மாணவிகளுக்கும் அவர்கள் தங்கிப் படித்த விடுதி அருகே நினைவுத் தூண் அமைக்கப்பட்டுள்ளது. தீர்ப்பு வெளியானவுடன்ஏராளமான மாணவ, மாணவிகள் அங்கு கண்ணீருடன் கூடினர். மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்

பின்னர், இந்த நீதியை காயத்ரி, ஹேமலதா, கோகிலவாணி ஆகிய எந்தப் பாவமும் அறியாத மாணவிகளுக்கு சமர்பிக்கிறோம். இது போன்றசெயல்கள் இனி நடக்கவே கூடாது என பிரார்த்திப்போம். வன்முறை இல்லாத அரசியல் பாதை உருவாக பாடுபடுவோம் என்றஉறுதிமொழியையும் ஏற்றனர்.

இந் நிகழ்ச்சியின்போது மாணவ, மாணவிகள் கண்ணீரும் உணர்ச்சிப் பிழம்புமாக காணப்பட்டர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+