சென்னையில் சிக்கிய தாவூத் கூட்டாளி

Subscribe to Oneindia Tamil

சென்னை:பிரபல தாதா தாவூத் இப்ராகிமின் முக்கிய கூட்டாளிகளில் ஒருவரான முகம்மது இக்பால் மேமன் சென்னையில் கைதுசெய்யப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் இன்று மும்பைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

மும்பை தொடர் குண்டுவெடிப்பில் முக்கியக் குற்றவாளியான தாவூத் இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளி இக்பால் மேமன்.இவரை பல வருடங்களாக மும்பை போலீஸார் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் மேமன், ஹாங்காங்கிலிருந்து இலங்கை வழியாக சென்னை வருவதாக தகவல் கிடைத்தது. இதுகுறித்ததகவல் கிடைத்ததும் போலீஸார் விமான நிலையத்தை முற்றுகையிட்டு மேமனைப் பிடித்தனர்.

இக்பால் மேமன் கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வந்தார். அவர் மீது பல்வேறு கடத்தல் வழக்குகள் உள்ளன. கடந்தஐந்து ஆண்டுகளாக இவரை மும்பை போலீஸாரும், சுங்கத் துறையினரும் தேடி வந்தனர்.

இந்த நிலையில் சென்னையில் பிடிபட்டார் மேமன். அவரை ஆலந்தூர் நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர். அவர்பிடிபட்ட விவரம் ஏற்கனவே மும்பை போலீஸாருக்குத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து அவர்கள் இன்று காலை சென்னை வந்தனர். நீதிமன்றத்தில் மேமனை தங்களது பொறுப்பில் எடுத்துச் செல்லஅனுமதி பெற்ற பின்னர் பலத்த பாதுகாப்புடன் மும்பைக்குக் கொண்டு சென்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+