வெளியுறவு இணை அமைச்சராகிறார் சசி தரூர்?
டெல்லி:ஐ.நா. பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிட்டு தோற்ற சசி தரூர், மத்திய வெளியுறவு இணை அமைச்சராகநியமிக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சசி தரூர் ஐ.நா. துணைப் பொதுச் செயலாளராக இருந்தவர். பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிட்டார்.ஆனால் முதல் சுற்றிலேயே தோற்றுவிட்டார். இதனால் கடைசி சுற்றில் இருந்து விலகிக் கொண்டார்.
புதிய பொதுச் செயலாளராக பான் கி மூன் பதவியேற்ற பின்னர் சமீபத்தில் தனது ஐ.நா. பதவியை விட்டுவிலகினார் தரூர். இந்த நிலையில் தரூர், விரைவில் மத்திய வெளியுறவு இணை அமைச்சராக பொறுப்பேற்பார்என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்ட மலையாளியான சசி தரூருக்கு அமைச்சர் பதவியை வாங்கித் தர கேரளசேர்ந்த லாபி தீவிரமாக களமிறங்கியுள்ளது.
இதில் முக்கியமானவர்கள் பிரதமரின் பாதுகாப்புத்துறைச் செயலாளர் நாராயணன், வெளியுறவுச் செயலாளர்சிவசங்கர மேனன், ராஜிவ் குடும்பத்திற்கு நெருக்கமான ஜார்க் ஆகியோர். இவர்கள் அனைவருமே கேரளத்தைசேர்ந்தவர்கள்.
மிகுந்த திறமைசாலியான சசி தரூரை வெளியுறவுத்துறையில் பயன்படுத்திக் கொள்ள பிரதமர் மன்மோகன்சிங்கும் ஆர்வம் காட்டுவதாகத் தெரிகிறது. சர்வதேச அளவில் நல்ல தொடர்புகளையும், அனுபவத்தையும்கொண்டுள்ளவர் தரூர்.
தற்போது வெளியுறவு இணை அமைச்சராக உள்ள அனந்த் சர்மாவுக்குப் பதில் தரூர் அப்பொறுப்பில்நியமிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
ஐ.நா. சபையில் கிட்டத்தட்ட 28 ஆண்டுகளாக பல்வேறு பொறுப்புகளில் இருந்த அனுபவம் உடையவர் தரூர்என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச விவகாரங்களில் கில்லாடி.












Click it and Unblock the Notifications