நெல்லை ரயில் கோட்டம்: காங். கோரிக்கை
நாகர்கோவில்:சேலத்தைப் போல திருநெல்வேலியிலும் புதிய ரயில்வே கோட்டம் அமைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர்ராமதாஸைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியும் கோரிக்கை வைத்துள்ளார்.
பாலக்காடு ரயில் கோட்டத்தில் உள்ள தமிழக பகுதிகளைப் பிரித்து சேலத்தைத் தலைமையிடமாகக் கொண்டுபுதிய ரயில்வே கோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது
இதேபோல தற்போது திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ் வரும் நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டபகுதிகளைப் பிரித்து நெல்லையைத் தலைமையிடமாகக் கொண்ட புதிய கோட்டம் அமைக்க வேண்டும் என்றகோரிக்கை வலுத்துள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸ் இந்த கோரிக்கைக்கு உரம் சேர்த்துள்ளார். கேரளாவின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தஇரு மாவட்டப் பகுதிகளையும் பிரித்து புதிய கோட்டம் அமைக்க முயற்சிக்க வேண்டும் என முதல்வர்கருணாநிதிக்கு அவர்கோரிக்கை விடுத்துள்ளார்.
இதே கோரிக்கையை தற்போது காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியும் வலியுறுத்தியுள்ளார். நாகர்கோவிலில்இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சேலத்தைப் போலவே நெல்லையைத் தலைமையிடமாகக்கொண்டு புதிய ரயில்வே கோட்டம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications