For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

யாழ்ப்பாணத்தில் தமிழ் மாணவர் சுட்டுக் கொலை

By Staff
Google Oneindia Tamil News

யாழ்ப்பாணம்:யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த தமிழ் மாணவரை சுட்டுக் கொல்லப்பட்டார். அவரை ராணுவம்தான் சுட்டுக் கொன்றதாக புகார் கூறப்படுகிறது.

ண்யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தவர் கிருஷ்ணர் கமலதாஸ். 24 வயதாகும் இவர் படிப்போடு,மாணவர்களுக்கு பாடமும் நடத்தி வந்தார்.

நேற்று வாரணி என்ற இடத்தில் உள்ள ராணுவ முகாம் அருகே சுட்டுக் கொல்லப்பட்டுப் பிணமாக கிடந்தார்கிருஷ்ணர். அவரை ராணுவம்தான் சுட்டுக் கொன்றுள்ளதாக புகார் கூறப்படுகிறது.

சமீப காலமாக தமிழ் இளைஞர்கள், மாணவர்களை விசாரணை என்ற பெயரில் ராணுவம் அழைத்துச் சென்றுவருகிறது. அவர்களில் பெரும்பாலானோர் திரும்பி வருவதில்லை. பலர் கொல்லப்பட்டு விட்டனர் என புலிகள்குற்றம் சாட்டி வருகின்றனர்.

கிருஷ்ணர் துன்புறுத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடல்முழுவதும் காயங்கள் காணப்படுகின்றன.

விமானப் படைத் தாக்குதலில் 2 தமிழர்கள் பலி:

இதற்கிசையே தமிழர்கள் மீது தொடர்ந்து ராணுவமும், விமானப்படையும் தாக்குதல் நடத்தி வருகின்றன. தமிழர்கள் வசிக்கும் கிராமங்களில் விமானப்படைவிமானங்கள் குண்டு வீசித் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இன்று காலை 7.30 மணிக்கு புலியங்குளம் அருகே உள்ள பரசங்குளம் என்ற கிராமம் மீது விமானப்படையின் கிபிர் விமானங்கள் சரமாரியாக குண்டு வீசித் தாக்கின.இதில் 2 தமிழர்கள் பலியானார்கள். ஒருவர் படுகாயமடைந்தார்.

நெடுங்கேரணியில் கண்ணிவெடி தாக்குதல்:

இதற்கிடையே, நெடுங்கேரணி பகுதியில் இன்று அடுத்தடுத்து இரண்டு கண்ணிவெடித் தாக்குதல் நடந்தது. முதல் தாக்குதல் காலை 7.15 மணிக்கு நடந்தது. இதில்நெடுங்கேரணி மருத்துவமனைக்குச் சொந்தமான ஆம்புலன்ஸ் சேதமடைந்தது.

அடுத்த தாக்குதல் 8.20 மணிக்கு நடந்தது. இதில் பேருந்து ஒன்று சிக்கி சேதமடைந்தது. இரு தாக்குதல்களிலும் உயிர்ப் பலி ஏதும் இல்லை.

கரை ஒதுங்கிய தமிழ் மீனவரின் சடலம்:

இதற்கிடையே, காணாமல் போன தமிழ் மீனவர் சிவநாதன் சுரேஷ் என்பவ>ன் உடல் முல்லைத் தீவில் கரை ஒதுங்கியுள்ளது.

சுரேஷும், கருணாகரன் ஜெகதீஸ்வரன் என்ற மீனவரும் கடந்த 15ம் தேதி புதுக்குடியிருப்பு, மத்தளம் பகுதியிலிருந்து மீன் பிடிக்கச் சென்றபோது காணாமல்போனார்கள். இவர்களை கடற்படையினர் தாக்கிக் கொன்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந் நிலையில் சுரேஷின் உடல் மட்டும் கரை ஒதுங்கியுள்ளது.இன்னொருவரின் கதி என்ன என்று தெரியவில்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X