மறுதேர்தல்-திமுக கூட்டணி வெற்றி-சென்னைமாநகராட்சியில் முதன்முதலாய் நுழையும் தேமுதிக

Subscribe to Oneindia Tamil

சென்னை:சென்னை மாநகராட்சிக்கு நடந்த மறு தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் பெரும் வெற்றி பெற்றுள்ளனர். இரு இடங்களில் தேமுதிகவும், மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட், பாஜக ஆகியவை ஒரு இடத்திலும் வென்றுள்ளன. இதன் மூலம் சென்னை மாநகராட்சியில் தேமுதிக முதன்முதலாக காலடி எடுத்துவைக்கிறது.

சென்னை மாநகராட்சியின் 67 வார்டுகளுக்கு 18ம் தேதி மறு தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு 10மையங்களில் தொடங்கியது. இதையொட்டி ஓட்டு எண்ணும் மையங்களில் மிக பலத்த போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டது.

இதில் இதுவரை முடிவுகள் அறிவிக்கப்பட்ட 39 வார்டுகளில் 35ல் திமுக கூட்டணியும், இரு இடங்களில் தேமுதிகவும், சிபிஎம் 1 இடத்திலும் பாஜக ஒரு இடத்திலும்வென்றுள்ளன. மேலும் 2 இடங்களில் தேமுதிகவும் மற்ற அனைத்து வார்டுகளில் திமுக கூட்டணி வேட்பாளர்களும் முன்னணியில் உள்ளனர்.

கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து விலகி போட்டியிட்டு படுதோல்வி அடைந்த மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சிக்கு இந்த முறை ஒரு வார்டு கிடைத்துள்ளது. மறு தேர்தலிலும் அக் கட்சி தனித்தே நின்றது.

கடந்த தேர்தலில் தேமுதிகவுக்கு ஒரு வார்டு கூட கிடைக்கவில்லை. ஆனால் தற்போது நடந்துள்ள மறுதேர்தலில் அக்கட்சி 2 வார்டுகளில் வென்றுள்ளது. மேலும் இரு இடங்களில் முன்னணியில் உள்ளது. அத்தோடுபெரும்பாலான வார்டுகளில் அக்கட்சியே 2வது இடத்தையும் (அதிமுக இல்லாததால்) பிடித்துள்ளதுகுறிப்பிடத்தக்கது.

மறு தேர்தல் அறிவிக்கப்பட்ட 100 வார்டுகளில் 33 வார்டுகளுக்கு போட்டியின்றி கவுன்சிலர்கள் தேர்வுசெய்யப்பட்டு விட்டனர். மீதமுள்ள 67 வார்டுகளுக்கு மட்டுமே தேர்தல் நடந்தது.

இந்த தேர்தலை அதிமுக, மதிமுக புறக்கணித்தன. தேமுதிக சார்பில் 62, திமுக 36, பாஜக 34, காங்கிரஸ் 19,பாமக 10, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 8, விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் 2 வேட்பாளர்கள் என மொத்தம் 416அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்கள் தவிர 245 சுயேச்சைகளும் போட்டியிட்டனர்.

இதனால் திமுக கூட்டணிக்கும் தேமுதிகவுக்கும் இடையில் தான் நேரடி போட்டி நிலவியது. விஜய்காந்த் மிகத் தீவிரமாக சென்னையை சுற்றி சுற்றிவந்து பிரச்சாரம் செய்தார்.

ஆனால், 30 சதவீதமே வாக்குப் பதிவு நடந்தது. மறு வாக்குப் பதிவின்போதும் பல இடங்களில் அடிதடி, கள்ளஓட்டு உள்ளிட்ட அமர்க்களங்கள் நடந்தேறியது குறிப்பிடத்தக்கது.

இந்த மறு தேர்தலை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுகப் போவதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளதுகுறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+