அவதூறு வழக்கு-தள்ளுபடி செய்ய கோரும் ஜெ
சென்னை:தமிழக அரசு தன் மீது தொடர்ந்துள்ள அவதூறு வழக்கை டிஸ்மிஸ் செய்யக் கோரி சென்னைஉயர்நீதிமன்றத்தில், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மனு தாக்கல் செய்துள்ளார்.
நாடாளமன்றத்தில் எம்.ஜி.ஆர். சிலை திறப்பு தொடர்பாக முதல்வர் கருணாநிதி குறித்து ஜெயலலிதாகடுமையான கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து முதல்வரின் பெயருக்குக் களங்கம் கற்பிக்கும் வகையில் ஜெயலலிதா பேசியுள்ளதாக கூறி அவர்மீது தமிழக அரசு சார்பில் சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், 26ம் தேதி ஜெயலலிதா நேரில் ஆஜராக வேண்டும் என்றுஉத்தரவிட்டது.
இந்த நிலையில் வழக்கைத் தள்ளுபடி செய்யக் கோரியும், நேரில் ஆஜராக வேண்டும் என்ற உத்தரவைதள்ளுபடி செய்யக் கோரியும், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து தனக்கு விலக்கு அளிக்கும்படியும்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications