ராமதாஸ் வார்னிங்-லாட்டரி கும்பல் அமுக்
சென்னை:தடை செய்யப்பட்ட லாட்டரிச் சீட்டுக்களை விற்பனை செய்ததாக தமிழகம் முழுவதும் 259 பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 12 ஆயிரத்து 788 ரூபாய் மதிப்புள்ள லாட்டரிச் சீட்டுக்கள் பறிமுதல்செய்யப்பட்டன.
தமிழகம் முழுவதும் லாட்டரி விற்பனை ரகசியமாக நடந்து வருவதாகவும், போலீசார் அதைகண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் சமீபத்தில் அறிக்கை விட்டார் பாமக நிறுவனர் ராமதாஸ். இதைக்கண்டித்தும் தமிழக அரசைக் கண்டித்தும் போராட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்தார்.
இதையடுத்து இந்த கள்ள லாட்டரி கும்பலை போலீசார் அமுக்க ஆரம்பித்துள்ளனர்.
இதுதொடர்பாக டிஜிபி முகர்ஜி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகம் முழுவதும் லாட்டரிச் சீட்டுவிற்பனைக்குத் தடை செய்யப்பட்டுள்ளது.
தடையை மீறி லாட்டரிச் சீட்டுக்கள் விற்கப்படுவதாக வந்த தகவலின்பேரில் அவர்களைப் பிடிக்க நடவடிக்கைஎடுக்கப்பட்டது. இதில் 259 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து 12 ஆயிரத்து 788 ரூபாய் மதிப்புள்ள 29 ஆயிரத்து 670 லாட்டரிச் சீட்டுக்கள் பறிமுதல்செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்டவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களிலிருந்து லாட்டரிச்சீட்டுக்களை வாங்கி தமிழகத்திற்குள் விற்பது சட்டப்படி குற்றமாகும். இதுபோன்று தடையை மீறிசெயல்படுவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்.
லாட்டரிச் சீட்டு விற்பவர்கள் மீதான வேட்டை தொடர்ந்து நடைபெறும் என்று கூறியுள்ளார் முகர்ஜி.












Click it and Unblock the Notifications